tamilnadu

img

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு: வினாடிக்கு 2,000 கனஅடியாக உயர்வு  

செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரியின் நீர்வரத்து அதிகரித்து உபரி நீரும் வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கூடுதலாக 500 கனஅடி என மொத்தம் 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தற்போது 2,000 கன அடியாக உயர்ந்துள்ளது. 

;