சென்னை, ஜுன் 15 தமிழகத்தில் குடிமராமத்து பணிகளுக் காக, தமிழக அரசு சுமார் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின்கீழ், தமி ழகத்தில் ஏரி, குளங்கள், அணைகள், பாசன கால்வாய்கள் மழைக்காலத்துக்கு முன்பு தூர்வாரப்படும். அந்தவகையில், நடப்பாண்டில் தமிழகம் முழுவதிலும் உள்ள ஏரி, குளங்களை விவசாயிகள், பொது மக்கள் பங்களிப்போடு தூர்வாரும் குடி மராமத்து பணிகளுக்கு 499 கோடியே 68 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளி யிட்டுள்ள அரசாணையில், குடிமரா மத்து திட்டத்தின் கீழ் சென்னை மண்ட லத்தில் 277 பணிகளும், திருச்சி மண்டலத்தில் 543 பணிகளும், மதுரை மண்டலத்தில் 681 பணிகளும், கோவை மண்டலத்தில் 328 பணிகள் என மொத்தம் 1,829 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. குடிமராமத்து பணிக்கு கடந்த 2017ஆம் ஆண்டில் 100 கோடி ரூபாயும், 2018ஆம் ஆண்டில் 331 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சுமார் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.