சென்னை, ஜூன் 23 - ஒப்பந்த ஊழியர்கள் அனை வரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் கோரிக்கை மாநாடு வலியுறுத்தி உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்குவது, கழிவு நீரகற்றும் பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் கோரிக்கைகளை முன்வைத்து ஞாயிறன்று (ஜூன் 23) சைதாப்பேட்டையில் சிறப்பு கோரிக்கை மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில், மனிதக் கழிவு களை மனிதனே அகற்றுவதை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. இத்தகைய பணியில் ஈடுபட்டு உயி ரிழந்தால் ரூ.30 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மலக்குழியில் மரணடையும்போது, காவல்துறை 204 (ஏ) பிரிவின் கீழ் வழக்கு பதிந்தாலும், ஒருவர் கூட தண்டிக்கப்பட்டது கிடை யாது. எனவே, கழிவுநீரகற்றும் பணியை இயந்திரமயமாக்க வேண்டும். மனிதக்கழிவுக்குள் மனி தர்களை இறக்குவோர் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும். இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழி லாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும். வாரியம் மற்றும் தனியார் மூலம் இத்தொழிலில் ஈடுபட்ட தொழி லாளர்களுக்கு பாதுகாப்பு உப கரணங்கள் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
நீர்நிலைகளை காக்க புதிய துறை
குடிநீர் வாரியத்தை பகுதிப்பகுதி யாக தனியார்மயமாக்குவதை தடுக்க வேண்டும். வாரிய எல்லைகள் விரிவடையும்போது, நிரந்தர ஊழியர்களை எடுக்க வேண்டும். அதில் தற்காலிக ஊழியர்க ளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மாநகராட்சி எல்லைகளுக்குள் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க சென்னை மாநகராட்சி, வாரியம் ஆகியவற்றை உள்ளடக்கி புதிய துறையை ஏற்படுத்த வேண்டும்.
480 நாட்கள் பணி முடித்த, 3 முதல் 15 ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்க ளாக பணியாற்றும் அனைத்து தொழி லாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மாற்றி, தொழி லாளர்களுக்கு வாரியமே நேரடியாக பணம் செலுத்த வேண்டும்,
சேவைத்துறையான வாரியத்தின் நிதிச்சுமையை ஈடுகட்ட அரசு நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க வேண்டும், ஜெட்ராடு, சில்ட் ஆட்டோ, சூப்பர் சக்கர் ஊழியர்கள், களப்பணி யாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்ட 2 ஆயிரத்து 850 தொழிலாளர்களை விரைந்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும் அதேநாளிலிருந்து வாரிய ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜூலை 10 ஆர்ப்பாட்டம்
இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கி பேசிய சங்கத்தின் தலைவர் க.பீம்ராவ், “தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 10 அன்று வாரிய அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடை பெறும்” என்று அறிவித்தார்.
மாநாட்டு கொடியை சென்னை குடிநீர் வாரிய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் தலைவர் எம்.பரமச்சந்திரன் கொடியேற்றினார். சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.சீனிவாசன் வரவேற்றார். பொருளாளர் இ.ராஜன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். கோரிக்கைகளை விளக்கி பொதுச் செயலாளர் எம்.பழனியும், துணைத்தலைவர் சி.சத்யநாதனும் பேசினார். செயற்பொறியாளர் இரா.ஜெய்சங்கர் சிறப்புரையற்றினார். துணைத்தலைவர் இ.காசி நன்றி கூறினார்.