tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

பணி நிரந்தரம் கேட்டு குடிநீர் வாரிய  தொழிலாளர்கள் ஆக.5 தொடர் போராட்டம்

சென்னை, ஜூலை14 - ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆக.5 முதல் சென்னை பெரு நகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று  வாரிய தலைமையகம் முன்பு குடும்பத்து டன் போராட்டம் நடத்த உள்ளனர்.

இது தொடர்பாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல், கழிவு நீரகற்று வாரிய தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) தலைவர் க.பீம்ராவ், பொதுச்செயலாளர் எம்.பழனி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் 3 முதல் 15 ஆண்டுகள் வரை ஒப்பந்த முறையில் பணிபுரியும் 2 ஆயிரத்து 850 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 671 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தொழிலாளர் ஆணையரிடம் உள்ள வழக்கை விரைந்து முடித்து பணி நிரந்தரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 5  முதல் சிந்தாதரிப்பேட்டை வாரிய அலுவலகம் முன்பு குடும்பத்தோடு தொடர் போராட்டம் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே போதை ஆசாமி தற்கொலை

விழுப்புரம், ஜூலை14- விழுப்புரம் அருகே பெரும்பாக்கம் கிராமத் தைச் சேர்ந்தவர் விநாயக மூர்த்தி வயது (30), இவரது மனைவி சுமதி வயது (27), இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

விநாயகமூர்த்தி தினந் தோறும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது, இதனால் கணவன் மனைவிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது, இந்த நிலை யில் சம்பவத்தன்று மது  குடித்துவிட்டு விநாயக மூர்த்தி வீட்டுக்கு சென்றுள் ளார், இதை பார்த்து கோபம் அடைந்த மனைவி சுமதி கணவர் விநாயகமூர்த்தியை கண்டித்துள்ளதாக தெரி கிறது, இதில் மனமுடைந்த விநாயகமூர்த்தி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 ஜூலை 19 வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை, ஜூலை 14 -  ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வெள்ளியன்று (ஜூலை 19) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியார் துறை  நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. முகாமில் 8-ஆம்  வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும்  பி.இ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். தனியார்துறை  வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இத் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.