tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

சென்னையில் நாளை குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம்

சென்னை, ஜூன் 12 சென்னைக் குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம்  சனிக்கிழமை ஜூன்.14 குடிநீர் வாரிய 15 பகுதி அலுவலகங்களில் நடைபெறுகிறது. சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில், குறை தீர்க்கும் கூட்டங்கள் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான குறை தீர்க்கும் கூட்டம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும். இந்த குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் பகுதி அலுவலகங்கள் விபரம்: திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டை யார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசர வாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்க நல்லூர் ஆகிய 15 பகுதி அலுவலகங்களில் நடைபெறும். இந்த குறை தீர்க்கும் கூட்டங்கள் வாயிலாக பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வைப் பொறியாளர் தலை மையில் இக்கூட்டம் நடைபெறும். எனவே, இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடி நீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்  களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர் பான விளக்கங்களையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் மாமல்லபுரம்

, ஜூன் 12-  மாமல்லபுரத்தில் புதனன்று கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் மீனவர்கள் படகுகளை பாது காப்பாக நிறுத்தி விட்டு சென்றனர். மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பல மீட்டர் தூரம் கரைப்பகுதி வரை ஆக்ரோஷமாக எழும்பி வந்தது. இந்த  அலையால் கடல் நீர் முன்னோக்கி வந்து கடற்கரையையொட்டி உள்ள ஓட்டல், ரெஸ்ட்டாரன்ட் மற்றும் ரிசார்ட்டுகள் வரை கடல் நீரால் சூழப்பட்டு குளம் போல் காட்சி அளித்தது. மாமல்லபுரம் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடல் அலையின் தாக்கத்தை தடுக்கும் வகையில், கடற்கரையொட்டி கற்களை கொட்டி தடுப்புகள் அமைத்துள்ளனர். ஆனால், தடுப்பு கற்களையும் தாண்டி கடல் அலை முன்னோக்கி வந்து தாக்குவதால் அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், கடற்கரையையொட்டி உள்ள உணவகங்களை கடல் அலைகள் தாக்கியதால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், உணவக உரிமையாளர்கள் அச்சமடைந்துள்ள னர். மேலும், அலைகள் கடற்கரை கோயிலின் மதில் சுவர் வரை சீறி எழும்பி வந்ததால், அங்குள்ள மணற்பரப்பு முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு குளம் போல் காட்சியளித்தது.  அலையின் தாக்கத்தால் படகு கள் மற்றும் மீன்பிடி வலைகள் அடித்து செல்லாமல் இருக்க கரைப் பகுதியில் மேடான இடத்தில் மீனவர்கள் பத்திரப்படுத்தி வைத்துள்ளனர்.

தாம்பரத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

தாம்பரம், ஜூன் 12- தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்ட லத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் புதனன்று (ஜூன் 11) நேரில் பார்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.   இதில் சானடோரியம் பகுதியில் ரூ.43.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டிடத்திற்கான கட்டுமானப் பணி, 52வது வார்டு, கன்னடபாளயம், மாநக ராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானம் மற்றும் புனரமைப்பு பணி, கன்னடபாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, 55வது வார்டு, பாலாஜி நகர் பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் 290 மீட்டர் நீளத்திற்கு புதிதாக மேற்கொள்ளப்பட்டும் தார்சாலை பணி, 55வது வார்டு, மேற்கு தாம்பரம், பாப்பன் கால்வாயில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியை பார்வையிட்டார். பின்னர் 56வது வார்டு, காந்தி தெரு பகுதியில் ரூ.24.90 லட்சம் மதிப்பீட்டில் 320 மீட்டர் நீளத்திற்கு புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையை ஆய்வு செய்து தரம் பரிசோதனை செய்தார். மேலும் பெருங்களத்தூர், மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகள் மற்றும் பள்ளியின் புனரமைப்பு பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து விரிவாகக் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம்  நகை, செல்போன் கொள்ளை

சென்னை, ஜூன் 12- சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் மருத்துவர் என கூறிக்கொண்டு மர்ம நபர் ஒருவர் நோயாளியிடம் இருந்து நகை, செல்போனை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போலவே உடை அணிந்து கொண்டு மர்ம நபர் ஒருவர் ஒவ்வொரு நோயாளியிடமும் கேஸ் ஷீட்டுகளை சரி பார்த்துள்ளார். கடந்த 6-ந்தேதி அந்த மர்ம நபர் தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டு நோயாளிகளை பரிசோதித்துள்ளார். காப்பீடு திட்டம் இருக்கிறதா என கேட்டுவிட்டு மின்னஞ்சலையும் அவர் கொடுத்துள்ளார். நோயாளி ஒருவரை ஸ்கேன் எடுக்க அழைத்து சென்ற அவர், ஸ்கேன் எடுக்கும்போது நகை போடக்கூடாது எனக்கூறி நகைகளை வாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இந்த சம்பவத்தையடுத்து மருத்துவமனையில் விசாரித்தபோது சம்பந்தப்பட்ட நபர் போலி மருத்துவர் என்பது அம்பலமானது. இதையடுத்து நகை திருட்டு தொடர்பாக நோயாளி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில், 3 சவரன் தங்க நகை மற்றும் செல்போனை மருத்துவர் என கூறிக்கொண்டு வந்தவர் திருடி சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். மர்மநபர் ஒருவர் மருத்துவரை போன்று அரசு மருத்துவமனையில் வலம் வந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.