tamilnadu

ஆளுநரை மட்டும் என்றைக்கும் மாற்றி விடாதீர்கள்: முதல்வர்

நான் ஒன்றிய அரசை, ஒன்றிய அரசின் பொறுப்பில் இருக்கக் கூடிய பிரதமரை, உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித் ஷாவை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது இங்கிருக் கும் ஆளுநரை மட்டும் என்றைக்கும் மாற்றிவிடாதீர்கள். இந்த மக்களவைத் தேர்தல் வரைக்குமாவது கொஞ்சம் இருக் கட்டும். எங்களுக்கு அதில் பல சவுரியங்கள் இருக்கிறது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திருமண விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகை யில், “முதன் முதலில் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்று கூறியபோது, எந்த மாநிலமும் அதை நிறைவேற்றுவதற்கு முன்வரவில்லை. அதைநிறைவேற்றிய முதல் மாநிலம் தமிழகம்தான்”என்றார்.

கருணாநிதி முதல்வராக இருந்த போது அது நிறைவேற்றப்பட்டது. ஆனால், இன்றைக்கு 40 சதவீதம். பெயருக்குத் தான் 40.ஆனால், தற்போது 50க்கும் மேலாக இருக்கிறது. போகிறபோக்கைப் பார்த்தால், உள்ளாட்சியில் ஆண்க ளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற நிலை வந்தாலும் ஆச்சரி யப்படுவதற்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

இன்று யார் யாரோ கேட்டுக் கொண்டி ருக்கிறார்கள் அல்லவா? பெரிய பெரிய பதவிகளில் உட்கார்ந்து கொண்டு. அந்தப் பதவி என்பது வேஸ்ட். இப்போது இரண்டு நாட்களாக அவர் என்ன மாதிரியான புருடாவெல்லாம் விட்டுக் கொண்டிருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும். என்னைப் பொறுத்த வரைக்கும், அந்த புருடாவெல்லாம் விடுகிறாரோ, அவர் தொடர்ந்து இருக்க வேண்டும். அவர் இருப்பது, நமது பிரச்சாரத்துக்கு வலுவை  சேர்த்து வருகிறது என்றும் முதல மைச்சர் தெரிவித்தார்.

தமிழர்களாக வாழ்கிறோம், தமிழுக் காகவே போராடுகிறோம், தமிழுக்கா கவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, உங்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள், என்று அன்போடு கேட்டு, அன்போடு மட்டுமல்ல, உரிமையோடு கேட்கிறேன் என்றும் முதலமைச்சர் கூறினார்.