tamilnadu

img

காத்திருப்பு போராட்டம் திருவள்ளூரில் காவல்துறை கெடுபிடி

காத்திருப்பு போராட்டம் திருவள்ளூரில்  காவல்துறை கெடுபிடி

திருவள்ளூர், மே 3- அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடைக்கால விடுமுறை வழங்க வலியுறுத்தி இரண்டாவது நாளாக காத்தி ருக்கும் போராட்டத்தில் காவல்துறையினர் கெடுபிடி செய்தனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக நுழைவாயில் முன்பு, இரண்டு நாட்க ளாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்திற்கு, பந்தல் அமைக்கவும்  காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால், வாக்கு வாதம் ஏற்பட்டது.  இதையடுத்து, போராட்டம் நடத்தி வந்த ஊழியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த காவல்துறையினர் முயன்ற னர். ஆனாலும், 500க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கடும் வெயிலில் குடைகள் மற்றும் தாங்கள் வைத்திருந்த பேனரை தலைமீது வைத்து சிரமத்திற்கு மத்தியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மணிமேகலா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் லட்சுமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.  மாவட்டச் செயலாளர் லதா, பொருளாளர் உமாராணி, துணைத் தலை வர்கள் உஷாராணி, சாந்தி, சுகுணா, இணை செயலாளர்கள் ஜெயந்தி, சாந்தி பிரவீனா, ஸ்ரீதேவி, மாநில செயற்குழு உறுப்பினர் பரமேஸ்வரி, ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் யோகராஜ், இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் போராட்ட களத்திற்கு சென்று ஆதரவு பேசினார்.

 


'