tamilnadu

வடசென்னையில் திமுக வெற்றியை உறுதிப்படுத்திய வாக்காளர்கள்

சென்னை, ஏப். 19-  வடசென்னை மக்களவைத் தொகுதியில் அதிக முறை வெற்றி பெற்றுள்ள திமுகவே இந்த முறையும் வெல்வது உறுதி என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 39 மக்கள வைத் தொகுதிகளில் ஒன்றான வடசென்னை மக்களவைத் தொகுதி  மிகவும் பழமையானது. கடந்த 2009ஆம் ஆண்டு தொகுதி மறுவரை யறை செய்யப்பட்ட பிறகு கொளத்தூர்,  ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றி யூர், பெரம்பூர், திருவிக நகர் (தனி) ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதி கள் வடசென்னை மக்களவை தொகுதி யில் இடம் பெற்றுள்ளன.

வட சென்னை மக்களவைத் தொகுதிக்கு 1957 முதல் 2019ஆம் ஆண்டு வரை தேர்தல் நடந்துள்ளது. முதல் முறையாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட எஸ்.சி.சி.அந்தோணிப்பிள்ளை வெற்றி பெற்றார். வட சென்னை தொகுதியை பொறுத்தவரை திமுக அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.

அதற்கு அடுத்து இடதுசாரி (யுசிபி) கட்சி இரண்டு முறையும், காங்கிரஸ், அதிமுக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 71.68 விழுக் காடு வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் திமுக வேட்பாளர் டாக்டர் கலா நிதி வீராசாமி 590,986  வாக்குகள் பெற்று  வெற்றி பெற்றார். 1,29,468 வாக்குகள் பெற்ற தேமுதிக வேட்பாளர் ஆர்.மோகன்ராஜ் இரண்டாம் இடம் பிடித்தார்.

அதற்கு அடுத்த இடத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஏ.ஜி.மவுரியா 1,03,167 வாக்குகளும், நாம்  தமிழர் கட்சி வேட்பாளர் பி.காளியம் மாள் 60,515  வாக்குகளும் பெற்றனர். தற்போது வடசென்னை மக்கள வைத் தொகுதியில் ஆண் வாக்காளர் கள் - 7,24,968, பெண் வாக்காளர்கள் - 7,59,208, மூன்றாம் பாலின வாக்காளர்கள் - 513 என மொத்தம் 14,84,689 வாக்காளர்கள் உள்ளனர். 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் டாக்டர் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோகரன், பாஜக சார்பில் ஆர்.சி.பால் கனகராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதினி உள்ளிட்ட 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பொதுவாக வட சென்னையை பொறுத்தவரை அதிக முறை வெற்றி பெற்ற கட்சிகள் அனைத்தும் இந்த முறை ஒரே கூட்டணியில் உள்ளன. எனவே இந்த முறையும் திமுகவே வெல்லும். கடந்த முறை 71.68 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்த நிலை யில், 7மணி நிலவரப்படி 69.26 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.