சென்னை, நவ.14-
தமிழ்நாடு அரசால் வரும் நவ.18 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நவ. 18, 19-க்கு பதில் 25 மற்றும் 26 தேதிகளில் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுறுத்தல்படி வரும் 2024 ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் கடந்த அக். 27 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெய ரைச் சேர்க்கவும், வாக்கா ளர் பட்டியலில் திருத்தம் செய்யவும் வசதியாக, இந்திய தேர்தல் ஆணையத் தால் நவ 4, 5 மற்றும் 18,19 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப் பட்டன. அதன்படி, நவ 4,5 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நிறைவு செய்யப் பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாடு அரசால் நவ.18-ம் தேதி பணி நாளாக அறிவிக் கப்பட்டுள்ளது. இதை யடுத்து, சிறப்பு முகாம் தேதிகளை நவ.18,19-க்கு பதில், நவம்பர் 25,26 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளுக்கு மாற்றிய மைத்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள் ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.