tamilnadu

img

மழைநீர் சேகரிப்பில் முன்னணி வகிக்கும் விருதுநகர் மாரியம்மன் தெப்பக்குளம்

விருதுநகர், ஜூலை 14- விருதுநகரில் உள்ள மாரியம்மன் கோயில் தெப்பக்குளமானது, 100 ஆண்டுகளுக்கு முன்பே மழை நீர் சேகரிப்பில் முன்னோடியாக திகழ் கிறது.  நிகழாண்டு தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழையானது பொய்த்துப் போனது. இதனால், முக்கிய நகரங்கள் மற்றும் கிரா மப்புறங்களில் குடிப்பதற்கு தண்ணீர் போதுமான அளவு கிடைப்ப தில்லை.நிலத்தடி நீர் அதல பாதா ளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என நீரியல் வல்லுநர்கள் கூறி வரு கின்றனர்.  சமீபத்தில் தமிழகத்திற்கு வந்த மத்திய அரசின் அதிகாரிகள், பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்த வருவதாக அறி வித்தனர். இதனால், பொது மக்கள், குடிநீரையும், பல இடங்களில் புழக் கத்திற்கான தண்ணீரையும் விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.  இந்தநிலையில், விருதுநகரின் மையப்பகுதியில் உள்ள மாரி யம்மன் கோயில் தெப்பகுளம் அதில் மழை நீரை சேகரிக்கும் முறை பற்றி அனைவருக்கும் தெரிவிக்க வேண் டும். கடந்த 130 ஆண்டுகளுக்கு முன்பு, நமது முன்னோர்களால் தொலை நோக்கு பார்வையுடன் உருவாகப் கப்பட்டது விருதுநகர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம். இது 21 அடி ஆழமும், 328 நீளமும், 254 அடி அகல மும் கொண்டது. அக்காலத்தில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க இந்த தெப்பக்குளம் அமைக்கப் பட்டுள்ளது. விருதுநகரின் வட மேற்கே உள்ள பேரையூர் மற்றும் வடமலைக்குறிச்சி பகுதியில் பெய்யும் மழை நீரானது, கௌசிகா ஆற்றின் வழியே ஓடும். அங்கிருந்து தண்ணீரை குழாய் மூலம் தெப்பத்தில் உள்ள வட்ட வடிவ மடையில் விழும் வகையிலும், வடக்கே 7 கி.மீ தொலைவில் உள்ள பேராலி, சத்திரரெட்டியபட்டி பகுதி யில் பெய்யும் மழை நீரானது, சிறிய கால்வாய் வழியாக வேலாயுத மடைக்கு வந்து சேரும். பின்பு, அங்கி ருந்து பெரிய குழாய்கள் மூலம் மாட்டு மடை, சின்ன மடை வழியாக தெப்பக் குளத்திற்கு தண்ணீர் வந்து சேரும். அத்தண்ணீரை சுமார் 2 ஆண்டுகள் வரை விருதுநகர் பொது மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால், அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள பகுதிகள் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. மாதம் மும்மாரி மழை பெய்த போது, தெப்பம் தொடர்ந்து நிரம்பி வந்தது. அங்கிருந்து வெளியேறும் உபரி நீரா னது, தெற்கு பகுதி வழியாக கௌசிகா ஆற்றில் கலக்கும் வகை யில் தெப்பம் வடிவமைக்கப்பட்டி ருந்தது.  இந்தநிலையில், சுமார் 15 வரு டங்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பொய்த்துப் போனது. அப்போது, தெப்பம் முற்றிலும் வறண்டு போனது. அதன் உள்ளே இருந்த 3 கிணறுகளி லும் தண்ணீர் வற்றியது. எனவே, தெப்பத்தில் மீண்டும் தண்ணீர் நிரம்ப வேண்டுமென சமூக ஆர்வ லர்கள், வியாபார பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் தங்களது பங்களிப்பை செலுத்தினர். அப்போ தைய ஆட்சியர் கே.கோபாலும் தன் னால் முடிந்த உதவிகளை செய் தார்.  இதையடுத்து, தெப்பத்தைச் சுற்றியுள்ள கிழக்கு மேற்கு, வடக்கு, தெற்கு பகுதியில் சுமார் ஒன்னரை லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடங்களை பி.வி.சி குழாய்கள் மூலம் ஒன்றிணைத்து, அந்தக் கட்ட டத்தில் விழும் மழை நீரை, அப்ப டியே பெரிய குழாய்களில் இணை த்து தெப்பத்தில் விழும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டது.  இதற்கு, இத்திட்டத்தால் சிறிய மழை பெய்தாலும் எளிதில் தெப்பக் குளத்தில் தண்ணீர் தேங்கியது. மேலும், அங்கிருந்து வெளியேறும் உபரி நீரை வீணாக்காமல், நல்ல முறையில் பயன்படுத்துவதற்காக, நகரில் வறண்டு கிடந்த நகராட்சி கிணறு, ஆச்சி நந்தவனம், ஷத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளி, பெரிய பேட்டை கிணறு, முருக பணிகர் பொது கிணறு, சுந்தரராஜ பெரு மாள்-தாமரையம்மாள் பொது கிணறு, அண்ணாமலையம்மாள் நடு நிலைப் பள்ளி கிணறு, பெரிய கிணற்றுத் தெரு கிணறு உள்ளிட்ட 20 கிணறுகளுடன் குழாய்கள் இணைக்கப்பட்டது. இதனால், அக் கிணறுகளில் தற்போது வரை நீர் நிரம்பி காணப்படுகிறது.  மேலும், விருதுநகர் நகராட்சி யில் மாதம் 2 அல்லது 3 முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டாலும், நிலத்தடி நீர் குறைவின்றி உள்ள கார ணத்தால், பொது மக்கள் கோடை காலங்களில், தங்களது அன்றாட பயன்பாட்டிற்கு நிலத்தடி நீரை பெரும் பகுதி பயன்படுத்துகின்றனர்.  விருதுநகர் தெப்பக்குளத்தில் மழை நீரை சேகரிக்கும் இத்திட்டமே, பின்னாளில், தமிழக அரசால் வீடு களில் கட்டாய மழை நீர் சேகரிப்பு திட்டமாக அறிவிக்கப்பட்டது.  தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கட்டடங்கள், பள்ளிகள், கோயில்கள் மற்றும் பொது இடங்க ளில் மழை நீர் சேகரிப்பு திட்டங்களை சிறப்பாக அமல்படுத்த அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளி மாணவ, மாணவிகளிடத்தி லும், பொது மக்கள் மத்தியிலும் மழை நீர் சேகரிப்பு மற்றும் அதன் அவசியம் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.