வினேஷ் போகத்துக்கு நீதி வேண்டும்
வாலிபர் சங்கம் போராட்டம் அறிவிப்புபாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து முழுமையான விசாரணை விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றம் நடத்த வேண்டும். மேலும் வினேஷ் போகத் அவர்களுக்கு எந்த வகையிலும் உறுதுணையாக நிற்காத இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பைக் கலைத்து விட்டுபுதியவர்களை நியமிக்க வேண்டும்.
அவருக்கு தற்போது உடனடியாக வெள்ளி பதக்கத்தை வழங்க வேண்டும். இந்தியாவே உங்களோடுஇருக்கிறோம். எனவே வினேஷ் போகத் அவர்கள் தற்போது அறிவித்துள்ள ஓய்வு அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும். மேற்கண்ட விஷயங்களை வலியுறுத்தி வினேஷ் போகத் அவர்களுக்கு வாலிபர் சங்கத்தின் ஆதரவைத்தெரிவித்து, தமிழ்நாட்டு முழுவதும் உடனடி போராட்டங்களை ஆகஸ்ட் 8,9 தேதிகளில் நடத்திடுமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
நீதிக்கான இந்த போராட்டத்தில் அனைத்துப் பகுதிஇளைஞர்களும், பங்கேற்க வேண்டுமென அழைக் கிறோம்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர்
எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் இருந்து...