tamilnadu

கிராம உதவியாளர்கள்  வாரிசுகளுக்கு பணி  

கிராம உதவியாளர்கள்  வாரிசுகளுக்கு பணி  

சென்னை: வருவாய் துறையில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  கிராம உதவியாளர்கள் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத் தின்கீழ் கொண்டு வரப்படுவார்களா என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து சட்டப் பேரவையில் துணைக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் கேகே எஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், “பணி நியமனம் செய்யும் போதே  சிறப்பு காலமுறை ஊதியத்தில்தான் பணி நியமனம் செய்துள்ள னர். வருவாய்த் துறையில் மட்டும் அல்ல; மற்ற துறைகளி லும் இதே நிலைதான். முதலமைச்சரிடம் பேசி காலமுறை ஊதியத்தை மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும். இதுவரை  கிராம உதவியாளர்கள் மரணம் அடைந்தால் அவர்கள் வாரிசு களுக்கு பணி வழங்கப்படுவது இல்லை. 10 நாட்களுக்கு முன்பு,  கிராம உதவியாளர்கள் மரணமடைந்தால் அவர்கள் வாரிசு களுக்கு பணி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்”என்றார்.