tamilnadu

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று துவங்குகிறது!

சென்னை, ஜூன் 13- விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகு திக்கு ஜூலை 10 அன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 14) துவங்குகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 தேர்தலில் போட்டியிடும் வேட்பா ளர்கள், தங்களுடைய வேட்பு மனுவை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்ய லாம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான பழனி தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுத் தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் மற்றும் அவருடன் வரு பவர்கள் தேர்தல் விதிகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்கும் வகையில் தாலுகா அலு வலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கலுக்கு ஜூன் 21  கடைசி நாளாகும். 24-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். ஜூன் 26 மாலைக்குள் மனுக்களைத் திரும்பப் பெற லாம். அதைத்தொடர்ந்து ஜூலை 10 அன்று வாக்குப் பதிவும், ஜூலை 13 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.