tamilnadu

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு ஒரு நாள் கட்டணம் மட்டுமே வசூல்

சென்னை, மே 17 - ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்ன தாக கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டு சென்ற இரு, நான்கு சக்கர வாக னங்களை எடுக்கும்போது, ஒருநாள் வாடகை மட்டும் செலுத்தினால் போதும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் அரசு ஊர டங்கு உத்தரவு அறிவித்ததையொட்டி கோயம்பேடு பேருந்து நிலையத்தி லிருந்து வெளியூர் சென்ற பொதுமக்கள்  தங்கள் வாகனங்களை பேருந்து நிலை யம் வாகன நிறுத்துமிடத்தில் விட்டு  சென்றுள்ளனர். இதன்படி சுமார் 145  நான்கு சக்கர வாகனங்களும், ஆயிரத்து 359 இரு சக்கர வாகனங்களும் விட்டுச்  செல்லப்பட்டுள்ளது. தற்போது வாக னங்களை திரும்ப எடுக்க செல்லும்  பொதுமக்களிடம் இந்த வாகனங்க ளுக்கு 55 நாட்களுக்கும் முழுநேர வாடகை கட்டணம் வசூலிப்பதாக கவ னத்திற்கு வந்தது.

இதனையடுத்து, துணை முதல்வர் பன்னீர் செல்வம் அறிவுறுத்தலின் படி இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் எதுவாக இருப்பினும், அவற்றிற்கு ஒருநாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு கடிதம் மூலம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் ஒருநாளுக்கு ரிய கட்டணமாக, நான்கு சக்கர வாக னங்களுக்கு 50 ரூபாயும், இரு சக்கர  வாகனங்களுக்கு 40 ரூபாயும், மிதி வண்டிகளுக்கு 15 ரூபாய் மட்டும் செலுத்தி தங்கள் வாகனங்களை எடுத்துக் கொள்ளலாம் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறி வித்துள்ளது.