திருவள்ளூர், நவ 27- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரி யத்தால் தேர்வு செய்யப் பட்ட சீருடைப் பணி யாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி திரு வள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் புதனன்று (நவ 26), நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்கள் ஆயுதப்படை- 5 பேருக்கும், தமிழ்நாடு சிறப்புக்காவலர்- 21 பேருக்கும் மற்றும் தீய ணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு தேர்ந் தெடுக்கப்பட்ட 12 பேருக்கும், சிறைத் துறைக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட ஜெயில் வார்டன் 1 நபர் என மொத்தம் 39 நபர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் போதைப் பொருட்களின் கடத்தலை தடுக்க தமிழக, ஆந்திர எல்லையோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பிற்கு பிறகே வாகனங்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்குள் அனு மதிக்கப்படுகிறது என்றார். விதிமுறைகளை மீறி கஞ்சா போன்ற போதைப் பொருட்களை கடத்தி வந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்படுபவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட 22 காவல் நிலையங்களிலும் போதிய காவலர்கள் பணியில் இருப்பதாக தெரி வித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதாகவும் அனைத்து காவல் நிலையங்களிலும் 6 சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பில் இருப்ப தாகவும் தெரிவித்தார்.