சென்னை, ஏப்.29- பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தோ ருக்கு, விடுதலைச் சிறுத்தை கள் கட்சி ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌர வித்து வருகிறது. அந்த வகை யில், இந்தாண்டுக்கான விருது களை விசிக அறிவித்துள் ளது. விடுதலைச் சிறுத்தை கள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இதுதொடர் பாக வெளியிட்டுள்ள அறிக் கையில் குறிப்பிட்டிருப்பதா வது:
“சமூகம், அரசியல், பண் பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோ த்தி தாசர் ஆதவன், காயிதே மில்லத் பிறை மற்றும் செம் மொழி ஞாயிறு” ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். 2022-ஆம் ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருது வழங்கி வரு கிறோம்.
இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருது திரைப்படக் கலைஞர் மதச் சார்பின்மைக்காக சமரசம் இல்லாமல் போராடி வரு பவருமான பிரகாஷ் ராஜ்-க்கும், ‘மார்க்ஸ் மாமணி’ விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் இரா. முத்தரசனுக்கும், ‘பெரியார் ஒளி’ விருது திரா விடர் கழகப் பிரச்சாரச் செய லாளர் வழக்கறிஞர் அ. அருள்மொழிக்கும் வழங்கு வதில் பெருமைப்படுகி றோம். ‘காமராசர் கதிர்’ விருது பேராயர் எஸ்றா சற் குணம், (தலைவர், இந்திய சமூக நீதி இயக்கம்), ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருது பேராசிரியர் ராஜ் கவு தமன், ‘காயிதே மில்லத் பிறை’ எஸ்.என். சிக்கந்தர் (மேனாள் மாநிலத் தலைவர், வெல்பேர் பார்ட்டி ஆப் இந் தியா), ‘செம்மொழி ஞாயிறு’ ஏ.சுப்பராயலு (கல்வெட்டிய லறிஞர்) ஆகியோருக்கும் மே 25 அன்று சென்னையில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது. இவ்வாறு திருமாவள வன் குறிப்பிட்டுள்ளார்.