சென்னை, டிச.2- டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம், 3-ஆம் நாள் அனைத்து நாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்கள் சுயமரியாதையுடன் சமுதாயத்தில் இணைந்து வாழ நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
தமது தலைமையிலான அரசு, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் நடவடிக்கையாக மாற்றுத் திறனாளிகள் உடல் ரீதியான குறைபாடு களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து தடுக்கவும், சிறப்புக் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி வழங்கவும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படுத்தப்படும் பிற நலத்திட்டங்களுக்காகவும் வழங்கப்படும் நிதியினை இந்த அரசு உயர்த்திக் கொண்டே வருகிறது என்றும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான நிலை யான நீடித்த இலக்குகளை அடைந்திடவும், அவர்களின் நலனை பாதுகாக்கவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என அனைவரும் ஒன்றிணைந்து உறுதி ஏற்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.