சென்னை,நவ.14-
தென்மாவட்ட மக்க ளுக்கு நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை அண்மையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
வாரம் முழுவதும் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இந்த ரயிலானது இயக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலிக்கு கூடுதலாக ஏழு வந்தே பாரத் ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 28ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மட்டும் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு சேவை இயக்கப் படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நவம்பர் 16, 23, 30, டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு திருநெல் வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் அதே தேதி களில் திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயில் (06068) மாலை 3 மணிக்கு திருநெல் வேலியில் இருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில் சேவை வழக்கம் போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது-