வள்ளீஸ்வரன் தோட்டம் குடிசைமாற்று வாரிய குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 25 பேருக்கு தலா 2ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையை த.வேலு எம்எல்ஏ வழங்கினார். குடியிருப்போர் சங்கத்தின் கவுரவத் தலைவர் கே.பாரதிராஜன், தலைவர் எஸ்.குமார், செயலாளர் எஸ்.குமார், பொருளாளர் சி.மோகன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.