புதுச்சேரியில் மீண்டும் வைத்திலிங்கம் போட்டி!
புதுச்சேரி, மார்ச் 22- புதுச்சேரியில் இரண்டுமுறை முதல் வர், 7 முறை எம்எல்ஏ மற்றும் ஒரு முறை எம்.பி. பதவிகளை வகித்துள்ள வைத்தி லிங்கம், மீண்டும் மக் களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். புதுச்சேரியை அடுத்த நெட்டப்பாக் கம் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் 1950 ஆண்டு பிறந்த வைத்திலிங்கம், புதுச்சேரியின் இரண்டாவது முதல்வராக பொறுப்பேற்ற வெங்கடசுப்பாவின் மக னாவார். கடந்த 2019 மக்களவைத் தேர்த லில் போட்டியிட்டு வென்ற அவர், இந்த முறையும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களம் காண்கிறார்.
கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்!
சென்னை, மார்ச் 22- திமுக கூட்டணியில் நாமக்கல் மக்கள வைத் தொகுதி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட் சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சி யின் சார்பில் சூரிய மூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால், சூரியமூர்த்தி பொதுமேடை யில் சாதிய வன்மத்துடன் பேசிய காணொ லிகள் சமூக வலைதளங்களில் வைரலா கின. இதையொட்டி, சூரிய மூர்த்தியை மாற்ற வேண்டும் என்றும் பரவலாக கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில், கொங்குநாடு மக் கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக் குழு அவசரமாக கூடியது. இதில், சூரிய மூர்த்தி திரும்பப் பெறப்பட்டு, நாமக்கல் மாவட் டச் செயலாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
குப்புற விழுந்தும் மண் ஒட்டவில்லையாம்: ஓபிஎஸ்
பாஜகவே கதி என்று கிடந்த - முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஒரு இடம் கூட தர முடியாது என்று அந்தக்கட்சி ‘பெப்பே’ காட்டி விட்டது. இதனால் ஆதர வாளர்களின் அதிருப்திக்கு ஆளான ஓ. பன்னீர்செல்வம், வேறுவழியில்லாமல் “தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க ஒரே ஒரு தொகுதியில் அதுவும் இராமநாதபுரத்தில் நானே போட்டியிடுகிறேன்” என்று சமா ளித்தார். அத்துடன் நிற்காத அவர், “பாஜக கூட்டணியில் 15 தொகுதிகளைக் கேட்டோம். அவர்களும் வாரி வழங்க தயாராக இருந்த னர்! பாஜகவில் தனுக்கு உரிய அன்பும், அங்கீகாரமும் உள்ளது, தரையில் குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவே இல்லை” என்று கொஞ்சம் கூட ரோஷமில்லாமல், வழக்கம்போல அடிமை மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும்
15 தொகுதிக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை, மார்ச் 22- தமிழ்நாட்டில் 9 மக்கள வைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வியாழ னன்று பாஜக வெளியிட்டது. வெள்ளியன்று மேலும் 15 தொகு திகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட் டுள்ளது.
இதன்படி திருவள்ளூரில் (தனி) - பாலகணபதி, வட சென் னையில் பால் கனகராஜ், திரு வண்ணாமலையில் அஸ்வத்தா மன், நாமக்கல்லில் கே.பி. ராம லிங்கம், திருப்பூரில் ஏ.பி. முரு கானந்தம், பொள்ளாச்சியில் வசந்தராஜன், கரூரில் செந்தில் நாதன், சிதம்பரத்தில் (தனி) கார்த்தியாயினி, நாகப்பட்டி னத்தில் (தனி) - எஸ்.ஜி.எம். ரமேஷ், தஞ்சாவூரில் எம்.முரு கானந்தம், சிவகங்கையில் தேவநாதன் யாதவ், மதுரையில் ராம சீனிவாசன், விருதுநகரில் ராதிகா சரத்குமார், தென்காசி யின் ஜான் பாண்டியன், புதுச் சேரியில் நமச்சிவாயம் ஆகி யோர் வேட்பாளர்களாக அறி விக்கப்பட்டுள்ளனர்.