tamilnadu

img

மழை முடியும் வரை மருத்துவ முகாம்கள் செயல்படும்

சென்னை,நவ.03- பருவமழை முடியும் வரை மருத்துவ முகாம்கள் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில்  அமைச்சர்  மா.சுப்பிரமணியன் செய்தியாளர் களிடம் கூறுகையில், 

உலகம் முழுவதும் குரங்கம்மை பரவி  வருவதால், சென்னை, மதுரை, கோவை, திருச்சி விமான நிலையங்களில், வெளிநாடு களில் இருந்து வருபவர்கள் பரிசோதனை செய்யப்படுகின்றனர். சென்னை, திருச்சி, கோவை, மதுரை அரசுமருத்துவமனை களிலும் சிறப்பு படுக்கைகள் அமைக்கப் பட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இருந்து 27 வயது இளைஞர் ஒருவர் கோவை  விமானநிலையம் மூலமாக தமிழகம் வந்த டைந்தார். 

காய்ச்சல் மற்றும் குரங்கம்மை நோயில் இருக்கும் கொப்புளங் கள் அவருக்கு இருந்தன. திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அவருக்கு இருந்தது சிக்கன் பாக்ஸ் தொற்று என்பது பரிசோதனையில் உறுதி யானது. ஆனாலும், மறு பரிசோதனைக் காக புனே ஆராய்ச்சி மையத்துக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளது. சென்னையில் 20 செ.மீ.க்கும் மேல் மழை பெய்துள்ளது. ஆனால், அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டதால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை. வட கிழக்கு பருவகாலம் முடியும் வரை முன்னேற் பாடு நடவடிக்கைகள், மருத்துவ முகாம் களை திரும்பப்பெற கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்தார்.