சென்னை,பிப்.7- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.6.66 லட்சம் கோடி அளவிற்கு தமிழ் நாட்டிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட் டுள்ளது.”என்றார்.
தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்டு வருகிறார். முதலீடு களை ஈர்ப்பதற்காக வெளிநாடு களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் என்றும் அவர் கூறினார். முன்னதாக அரபு நாடுகள், சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்த்தார்.
தற்போது ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று வெற்றி கரமாக தனது பயணத்தை முடித்து சென்னை திரும்பியுள்ளார்.
தொழில் துறையில் வரலாறு காணாத மிகப்பெரிய வளர்ச்சியைத் தமிழ்நாடு கண்டுவருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஸ்பெயின் பயணத்தில் ரூ.3440 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட் டுள்ளது. தமிழ்நாட்டில் படித்த இளை ஞர்களுக்கு குறிப்பாக நான் முதல்வன் திட்டம் மூலம் படித்த இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு குறித்த மிக சிறப்பான அறிவிப்புகள் விரை வில் வெளியாக உள்ளது.
புரிந்துணர்வு மேற்கொண்ட பல நிறுவனங்கள் தொடர்ச்சியாக தங்களது நிறுவனங் களைத் தமிழ்நாட்டில் தொடங்கி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.