மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை மேலும் வலுப்பெற வேண்டியது அவசியம்
விசிக தேர்தல் அங்கீகார விழாவில் பெ.சண்முகம் பேச்சு
மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை மேலும் வலுப்பெற வேண்டி யது காலத்தின் கட்டாயம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சி என்ற அந்தஸ்தை வழங்கி,இந்திய தேர்தல் ஆணை யத்தால் அதிகாரப்பூர்வமாக பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை வழங்கிய . விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி மக்க ளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா ஞாயிறன்று விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் பொதுச்செய லாளர் துரை.ரவிக்குமார் எம்.பி. தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் பொன்முடி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சி நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ், சிபிஎம் மாநில செய லாளர் பெ.சண்முகம், சிபிஐ மாநில செயலாளர் ரா.முத்தரசன், செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல்சமது எம்எல்ஏ ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் சிபிஎம் மாநிலச்செய லாளர் பெ.சண்முகம் பேசுகையில் மதச்சார்பற்ற சக்திகளை இணைக்கக்கூடிய சக்தியாக திரு மாவளவன் இருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இடதுசாரி களும் எந்தளவிற்கு இணைந்து பணி யாற்றுகிறோமோ அந்த அளவிற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். மத்தியில் ஆட்சி செய்கிற பாஜக அரசு, நவீன தாராளமய கொள்கைகளை மிக தீவிரமாக அமல்படுத்த பார்க்கிறது. அந்த கொள்கையால் ஒடுக்கப்பட்ட, பட்டி யலின மக்கள், விவசாய கூலித்தொழி லாளர்கள் பெரிதும் பாதிக்கப்படு வார்கள். பாஜக அரசு மதவெறி அரசியலையும்,வெறுப்பு அரசியலை யும் மேற்கொண்டு வருகிறது. இவற்றையெல்லாம் முறியடிக்க மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை மேலும் வலுப்பெற வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையெனில் இந்தியாவில் ஒற்றுமை இருக்காது. அம்பேத்கர் வகுத்த அரசியல் சாசனங்கள், கோட்பாடுகள் பாது காக்கப்பட வேண்டும். அவற்றுக்கு சிறு சேதம் கூடஏற்படாமல் பாது காப்பது நம்முடைய கடமை. அதற்காக அனைவரும் இணைந்து நிற்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என அவர் தெரிவித்தார். திருமாவளவன் விசிக திருமாவளவன் பேசுகை யில், தேர்தல் அரசியலுக்கு வர வேண்டும், சட்டமன்ற, நாடாளுமன்ற அவைக்கு செல்ல வேண்டும் என்றோ, தேர்தல் ஆணைத்தின் அங்கீகாரம் பெறும் அரசியல் கட்சியாக வளர்த்து எடுக்க வேண்டும் என்றோ எந்த திட்டமும் அப்போது இல்லை. சூது, சூழ்ச்சி, பழிகளை அள்ளி வீசுகிற அரசியல் களத்தில் எந்த பின்புலமும் இல்லாமல் தாக்குபிடித்து நிற்கிறோம் என்பதுதான் இந்த வெற்றியின் சாதனை யாகும் என அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சிந்தனைச்செல்வன், பாலாஜி, ஷாநவாஸ், பாபு, முதன்மை செய லாளர் பாவரசு, துணை பொதுச் செய லாளர் வன்னிஅரசு, தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் குண வழகன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.முன்னதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பெரியார் வர வேற்று பேசினார்.