tamilnadu

img

உடுமலை குட்டை திடல் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு

உடுமலை குட்டை திடல் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு'

உடுமலை, ஏப். 9 – உடுமலை மாரியம்மன் கோவிலின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு குட்டை  திடலில் பொழுதுபோக்கு அம்சங்களை  அமைக்க நடைபெறும் ஏலம், நான்கா வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள் ளது. ஏலத் தொகையை குறைக்க சிலர்  சிண்டிகேட் அமைத்து செயல்படுவ தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குற் றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உடுமலை நகரச் செய லாளர் தண்டபாணி கூறுகையில், “ஏலம்  எடுப்பவர்கள், பொழுதுபோக்கு அம் சங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூ லிக்கின்றனர். திருவிழா கடைகளுக்கும் அதிக வாடகை வசூலிக்கின்றனர். இத னால் பொதுமக்கள் பெரிதும் பாதிக் கப்படுகிறார்கள். சில ஆண்டுகளில் போட்டியால் ஏலத் தொகை அதிகரிக்கி றது. ஆனால், இப்போது சிலர் சிண்டி கேட் அமைத்து ஏலத் தொகையை குறைக்க முயற்சிக்கின்றனர். எனவே, அரசே இந்த பொழுதுபோக்கு அம்சங் களை நேரடியாக நடத்தி, கட்டணங் களை கட்டுப்படுத்த வேண்டும். விதிமீ றல்களையும் கண்காணிக்க வேண் டும்,” என்றார். வருவாய்த்துறையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த ஏலத்திற்கு, ரூ. 1 கோடியே 9 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்  குறைந்தபட்ச தொகையாக நிர்ணயிக் கப்பட்டிருந்தது. ஏலத்தில் பங்கேற்க முன் வைப்பு தொகையாக ரூ.27,28,000 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஏலம் மார்ச்  17, 24, 28 ஆகிய தேதிகளில் நடந் தது. ஆனால், பங்கேற்றவர்கள் தொகை  அதிகமாக உள்ளதாகக் கூறி ஏலத் தில் கலந்துகொள்ள மறுத்தனர். இதை யடுத்து, கடந்த புதனன்று வட்டாட்சியர் கௌரிசங்கர் தலைமையில் ஏலம் மீண்டும் நடத்தப்பட்டது. இதிலும் தீர்வு  ஏற்படவில்லை. இதன் காரணமாக ஏலம் நான்காவது முறையாக ஒத் திவைக்கப்பட்டது.

பொதுப்பாதையை ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சி

சேலம், ஏப். 9 – சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் அருகேயுள்ள மேட்டுப்பட்டி  தாதனூர் ஊராட்சியில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டும் முயற்சிக்கு எதிராக, அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புதனன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. தாதனூர் கருப்ப கவுண்டர் வட் டம் பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் நூற்றாண்டுக்கு மேலாக வசித்து வரு கின்றனர். இவர்கள் விவசாயத் தோட் டங்களுக்குச் செல்லப் பயன்படுத்தும் முக்கிய வழித்தடத்தில், அதே பகுதி யைச் சேர்ந்த ஐந்து பேர் வீடு கட்டும் பணியில் இறங்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பாதையை பயன்படுத்தும் மக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். அனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத னையடுத்து, புதனன்று சேலம் – அரூர் சாலையில் மேட்டுப்பட்டி தாத னூர் பகுதியில் மறியலில் ஈடு பட்டனர். இதனால், இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையறிந்து சம்பவ இடத்துக்கு  வந்த அம்மாபேட்டை, வீராணம், காரிப் பட்டி உள்ளிட்ட காவல் நிலையங் களைச் சேர்ந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் மறியலை கைவிட மறுத்து, “எங்களுக்கு நடந்து செல்ல பாதை வேண்டும், அந்தப் பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். இதனையடுத்து, அம்மா பேட்டை காவல் உதவி ஆணையர் நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனையடுத்து, வட்டாட்சியர் மற் றும் வருவாய் துறை அதிகாரிகள் சம் பவ இடத்திற்கு வந்து, வழித்தடங்களி லும் கட்டுமானப்பணிகள் நடைபெறும்  பகுதிகளிலும் நில அளவீட்டு பணிகளை  மேற்கொண்டு வருகின்றனர்.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒருவர்  கூறுகையில், “இந்த வழித்தடம் எங்க ளது முன்னோர்கள் காலத்திலிருந்து பொதுப் பாதையாக பயன்பட்டு வருகிறது. ஆனால் இப்போது சிலர் தவ றான முறையில் பட்டா பெற்று அந்த  வழியில் வீடு கட்டுகிறார்கள். இதனால்  500 ஏக்கர் விவசாய நிலத்திற்குச் செல்ல  முடியாத சூழ்நிலையில் உள்ளோம். அரசு உடனடியாக தலையிட்டு எங்க ளுக்கு வழித்தடத்தை மீட்டுத் தர வேண் டும்” என்றனர்.