tamilnadu

img

வீட்டுமனைப் பட்டா கோரி திருநங்கைகள் தர்ணா

வீட்டுமனைப் பட்டா கோரி திருநங்கைகள் தர்ணா

சிதம்பரம், ஜூன் 16 -  வீட்டுமனைப் பட்டா கோரி சிதம்பரம் சாராட்சியர் அலுவலகத்தில்  திருநங்கைகள் தர்ணா போராட்டத்தில் ஈபட்டனர். சிதம்பரம் அருகே லால்புரம் கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். தற்போது அவர்கள் வசிக்கும் வீடுக ளுக்கு அதிக வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உரிமை யாளர்கள் அவர்களை வீட்டை காலி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். எந்த வருமானமும் இன்றி வாடகை செலுத்த முடியாமல் சிரமம் அடைந்து வரு கின்றனர். பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் அனை வரும் பட்டப்படிப்புகள் படித்த நிலையில் மிகவும் சிரமமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அரசு அதே பகுதியில் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து மனு அளித்தும் அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர். இவர்களின் கோரிக்கை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திங்கள்கிழமை சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாராட்சியர் கிஷன்குமாரிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு மனுவை அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக  உறுதி அளித்தார்.