tamilnadu

img

மோடி அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத, விவசாய விரோத கொள்கைகளை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலூர்  அண்ணா அரங்கம் அருகில் தர்ணா நடைபெற்றது. தொமுச கே.ஆர்.சுப்பிரமணி, சிஐடியு எஸ்.பரசுராமன், ஏஐடியுசி ச.சுப்பிரமணியன், ஐஎன்டியுசி முகமது அலி ஜின்னா, எச்எம்எஸ் கா.வே.திருப்பதி, ஏஐசிசிடியு சிம்பு தேவன், விவசாயிகள் கூட்டமைப்பு கன்வீனர் கே.சாமிநாதன், மாநகர தொழிற்சங்க கூட்டமைப்பு சி.ஞானசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினார். ஓசூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட கவுன்சில்  செயலாளர் கோபாலகிருஷ்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் ஏஐடிசி மாவட்டச் செயலாளர் மாதையன்,ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் முனிராஜ் துணைத் தலைவர் பக்தவச்சலம் தலைமை ஆகியோர் தாங்கினர். சங்கங்களின் நிர்வாகிகள் வாசுதேவன், ஸ்ரீதரன்,கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி,சங்கரையா, செந்தில்,அசோக் லேலண்ட் சிஐடியு சங்க நிர்வாகிகள் சசிசேகரன் மாதவன்,தரணியன் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச பேரவை துணைத் தலைவர் க. சௌந்தரராஜன, எஸ். கே. எம். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி .கே. வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர், நிகழ்ச்சியில் ஏஐடியுசி நிர்வாகிகள் வே.முத்தையன், மாதேஸ்வரன், சிஐடியு மாவட்ட செயலாளர் இரா. பாரி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே. கே. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.