tamilnadu

img

தொழிற்சங்க அங்கீகார சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

தொழிற்சங்க அங்கீகார சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் , காண்ட்ராக்ட் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், கைத்தறி நெசவுத் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் சிஐடியு சார்பில் திங்களன்று (நவ.18)  இருசக்கர வாகன பிரச்சார இயக்கம் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஆலடி கேட்டில் துவங்கிய இப்பிரச்சார இயக்கத்திற்கு கைத்தறி சங்க மாவட்டச் செயலாளர் கே.ஜீவா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஜி.வசந்தா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் இ.பாண்டியன், ஜி.லட்சுமிபதி, ஆர்.தாமோதரன், பி.சிவக்குமார், எஸ். புவனேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர். சி.எஸ்.எம் தோப்பு பகுதியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் பிரச்சாரத்தை நிறைவு செய்து பேசினார்.