tamilnadu

img

கங்கைகொண்டான் ஏ.டி.சி. டயர் கம்பெனி தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் சிஐடியு வெற்றி

திருநெல்வேலி, ஜூன் 24- நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாக த்தில் ஏ.டி.சி. டயர் கம்பெனி செயல்படுகிறது. இங்கு ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலை யில் செவ்வாய்க்கிழமையன்று தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சிஐடியு 288 வாக்கு கள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளது.

தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம், என்.எல்.ஓ ஆகிய மூன்று சங்கங்கள் போட்டி யிட்டன. மொத்தம் 543 வாக்குகளுக்கு 529 வாக்குகள் பதிவாகின. முடிவில் வாக்குகள் எண்ணப்பட்டு சிஐடியு 288  வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றது. அண்ணா தொழிற் சங்க பேரவை 144 வாக்குகள் பெற்றது. என்.எல்.ஓ சங்கம் 96 வாக்குகள் பெற்றது. இறுதியாக, அங்கீகார சங்கமாக சிஐடியு தேர்ந்தெடுக்கப் பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அங்கீகார தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலை யான், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன், மாவட்டத் தலைவர் வேல்முருகன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.