அம்பத்தூர், டிச. 3- கொரட்டூர் ரயில் நிலையத்தில் கடந்த 7 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், ரயில் பயணிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பெரும் அவதிப்பட்டு வருன்றனர். சென்னை - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் அம்பத்தூர் அருகே கொரட்டூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த மார்க்கத்தில் நான்கு வழிப் பாதைகள் அமைந்துள்ளன. இதில் இரு இருப்பு பாதைகளில் மினசார ரயில்களும், மற்ற இரு இருப்பு பாதைகளில் விரைவு ரயில்களும் சென்று வருகின்றன. இதன் வழியாக தினசரி 160க்கும் மேற்பட்ட மின்சாரா ரயில்களும், 50க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் நிலையத்தை கொரட்டூர் பகுதிகளான சீனிவாச புரம், பாலாஜி நகர், சிவலிங்கபுரம், எல்லையம்மன் நகர், சுப்பு லட்சுமி நகர், அக்ரகாரம், கோபால கிருஷ்ணன் நகர், ராஜீவ்காந்தி நகர், லேக் வியு கார்டான், கே.எஸ்.ஆர்.நகர், திருமலை நகர், காவியா நகர், சாரதா நகர், கண்டிகை, டிவிஎஸ் நகர், அன்னை நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, குப்புரெட்டி நகர், சிவானந்தா நகர், சாந்தி காலனி, வெங்கட்ராமன் நகர், வன்னியர் தெரு, சாவடி தெரு உள்ளிட்ட நகர்க ளைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையம் அருகில் உள்ள கேட் வழியாக பல ஆணடுகளாக பொதுமக்கள் தண்ட வாளத்தை கடந்து சென்று வந்தனர். இந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடியே இருப்பதால், பயணிகள் தண்ட வாளத்தை கடக்க முடியவில்லை. மேலும் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாக னங்கள் செல்ல முடியாமல் இருந்தன. இதனால் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டன. அதோடு மட்டுமல்லாமல் பொதுமக்கள், பயணிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்துள்ளன. இதனால் ரயில்வே கேட்டை அகற்றி விட்டு கரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பயணி களும், பொதுமக்களும் பல ஆண்டு களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தென்னக ரயில்வே நிர்வாகம் கொரட்டூர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்தது. கொரட்டூர் சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் 10.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதையடுத்து கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரயில்வே கேட்டை அகற்றி விட்டு சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த சுரங்கப்பாதை 36 மீட்டர் நீளம், 14 மீட்டர் அகலம், 4.5 மீட்டர் உயரம் கொண்ட வகை யில் அமைக்கும் பணி தொடங்க ப்பட்டது. இந்த பணி இரு ஆண்டு களுக்குள் முடிக்கவும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் நவீன தொழில்நுட்ப முறையில் நடைபெற்று வந்தன. ஆனாலும் சுரங்கப்பாதை பணிகள் திட்டமிட்டபடி இரு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படவில்லை. மேலும் இந்த பணிகள் 7 ஆண்டுகளை கடந்தும் இன்னும் முடியவில்லை. இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுரங்கப்பாதை இணைப்பு சாலை அமைக்க 13.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கியது தற்போது ரயில்வே எல்லை வரையிலான பணிகள் 90 விழுக்காடு முடிந்து விட்டது. ஆனால் தற்போது மாநகராட்சிப் பகுதிகளை இணைக்கும் சாலைப் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் பயணிகள் தினசரி ரயில் நிலையத்திற்கு சிரமப்பட்டு சென்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கொரட்டூர் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள 20க்கும் மேம்பட்ட நகர்களைச் சேர்ந்த பொதுமக்களும் சென்னை, புறநகர் பகுதிக்கு சென்றுவர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சுரங்கப்பாதை பணி நடைபெறுவ தால் எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் தடை செய்யப்பட்டு ள்ளது. இதனால் இவர்கள் தங்களது பணிக்காக 5 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் தங்களது பயண இடங்களுக்கு செல்ல முடிய வில்லை. மேலும் அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ், தீ அணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. பாதசாரிகள் ஒத்தையடி பாதை வழியாக செல்ல வேண்டி யுள்ளது. மந்தமாக நடைபெறும் இந்த சுரங்கப் பாதை பணியால் கடந்த 7 ஆண்டுகளாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை களைச் சேர்ந்த அதிகாரிகள் ஆமை வேகத்தில் நடைபெறும் கொரட்டூர் ரயில் நிலைய சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.