tamilnadu

img

25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு செப். 1 முதல் அமல்

சென்னை, ஆக. 25- தமிழ்நாடு முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பய னீட்டாளர் கட்டணத்தை உயர்த்த  உள்ளதால், தேசிய நெடுஞ்சாலை களில் பயணம் செய்வது செப்டம் பர் 1 முதல் விலை உயர்ந்ததாக மாற வுள்ளது.

வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு பயணத்திற்கான கட்ட ணம் ரூ.5 முதல் ரூ.150 வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது  குறித்து இந்திய தேசிய நெடுஞ் சாலை ஆணைய அதிகாரிகள் கூறு கையில், “சலுகை ஒப்பந்தத்தின்படி கட்டண உயர்வு ஆண்டுதோறும் அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (விகி தங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2008-ன் படி மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில் சுங்கச்சாவடி  கட்ட ணம் உயர்த்தப்படுகிறது. 

தற்போது தமிழ்நாட்டில் 67 செயல்பாட்டு சுங்கச்சாவடிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 25  சுங்கச்சாவடிகளில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 1 அன்று பயனர் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. 

அதன்படி, அனைத்து வகை  வாகனங்களுக்கும் சுங்கச்சாவடி களில் 5 முதல் 7 சதவீதம் வரை இந்த  உயர்வு இருக்கும்” எனத் தெரி வித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சா வடிகள் மூலம் 2023- 2024ல் ரூ. 4,221 கோடி நெடுஞ்சாலை ஆணையம் வசூலித்துள்ளது. இது 2022- 23ல் வசூலான ரூ.3,817 கோடியை விட  10 சதவீதம் அதிகம். மாநில வாரி யாக வசூலிக்கப்பட்ட கட்டணங் களில் தமிழ்நாடு 5வது இடத்தில் உள் ளது. தமிழகத்தில் எல் அண்ட் டி நிறு வனம், கிருஷ்ணகிரி மற்றும் தோப்பூர் சுங்கச்சாவடியில் அதிக பட்சமாக ரூ.269 கோடி வசூலித்து உள்ளது. வாகன ஓட்டிகளின் தலையில் ஏற்றப்படும் இந்தச் சுமை, பெரும் கொதிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.