tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் ஈ.கே.நாயனார்

இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து அரசியல் போராட்டங்களில் பங்கேற்றவருமான தோழர் ஈ.கே.நாயனார்.  3 முறை கேரள முதல்வராக பணியாற்றிய இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

எரம்பலா கிருஷ்ணன் நாயனார் என்பது இவரது முழுப்பெயர். இவர் 1919 டிச.9 அன்று கேரளாவில் பிறந்தார். தனது உறவினரும் கம்யூனிஸ்ட் தலைவருமான கே.பி.ஆர். கோபாலனால் ஈர்க்கப்பட்டு, அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்றார். தனது இறுதியாண்டு பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மதுவிலக்குப் போராட்டத்தில் ஈடுபட்டார். சோசலிசப் பாதையில் பயணித்த நாயனார்,

1940 செப்.15 அன்று கண்ணூரில் நடந்த பேரணியில் பங்கேற்றார். அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் சூழலால் ஆறு ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தார்.1967 இல் பாலக்காட்டிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஆறுமுறை கேரள சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 ஜன.25 இல் முதல் முறையாக கேரள முதலமைச்சரானார். பிறகு, 1987, 1996 ஆகிய ஆண்டுகளில் 2 ஆவது, 3 ஆவது முறையாக முதல்வரானார். மேலும், இவர் 1981 இல் கேரளாவில் எலரிதட்டு அரசுக் கல்லூரியை நிறுவியது குறிப்பிடத்தக்கது.