tamilnadu

img

நமது இலக்குகளை அடைய உழைக்க வேண்டும்

சென்னை,அக்.27- 2047 ஆம் ஆண்டிற்குள் நமது இலக்குகளை அடைவதற்கு உழைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் முர்மு தெரிவித்தார்.

சென்னை உத்தண்டியில் கடல்சார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல் கலைக்கழகத்தின் 8-வது பட்ட மளிப்பு விழா வெள்ளியன்று காலை  நடந்தது. இதில் குடியரசுத் தலைவர்  திரவுபதி முர்மு கலந்து கொண்டு  245 மாணவர்களுக்கு பட்டங்களை  வழங்கினார். 

பின்னர் குடியரசுத் தலைவர் உரை யாற்றுகையில், “இந்தியா நீண்ட கடற்  கரைகளை கொண்ட நாடு. 7,500 கி.மீ. நீளமுள்ள கடற்கரை மற்றும் 1,382 கடல் தீவுகளுடன் இந்தியா குறிப்பிடத் தக்க கடல் பகுதியைக் கொண்டுள் ளது. 14,500 கிலோ மீட்டர்கள் செல்லக் கூடிய நீர்வழிகள் நம்மிடம் உள்ளன. இந்த கடற்கரைகள் பொருளாதார மேம்பாட்டின் முக்கியத்துவம் வகிக் கின்றன”என்றார்.

கடல்சார் வளங்கள் மூலம் இந்தியாவின் வணிகமும், வளர்ச்சி யும் பெருகி வருகிறது. நாட்டில் 65 விழுக்காடு வர்த்தகம் கடல் போக்கு வரத்து மூலம் மேற்கொள்ளப் படுகிறது. கடலோர பொருளாதாரம் 40 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்க ளுக்கு பயன் அளிக்கிறது. 

இந்தியா சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மீன்பிடி படகுகளை கொண்ட உலகின் 2-வது பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. இந்தத் துறையில் திறனை முழுமை யாக பயன்படுத்துவதற்கு முன், நாம்  பல சவால்களை கடக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சாகர்மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்களின் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து உள்ளது. தென்னிந்தியாவின் பல்ல வர்கள் சக்திவாய்ந்த கடற்படையை கொண்டிருந்தனர். 10ம் நூற்றாண்டில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கடல் கடந்து ஆட்சி செய்துள்ளனர்.

சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை யிறங்கியதை தொடர்ந்து, 6,000 மீட்டர்  ஆழமான கடல் நீரை ஆராய்வ தற்கும், ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டு ஆய்வு செய்வ தற்கு ‘சமுத்ராயன்’ பணிக்கு நாங்கள் இப்போது தயாராகி வருகிறோம்.

நமது காலத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பருவநிலை பேரழிவு ஆகும். இதில் உயரும் வெப்ப நிலை மற்றும் கடல் மட்டங்கள் அடங்கும். கடல்சார் துறையானது, மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலை க்கும், அபாயத்தை ஏற்படுத்தும் பருவ நிலை மாற்றத்தை தணிப்பதில் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர் சர்பா னந்தா சோனோவால், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.