tamilnadu

‘இப்போதில்லாவிட்டால் இனி எப்போதும் இல்லை’

மதுரை, ஏப்.8- மதச்சார்பின்மையை யும் ஜனநாயகத்தையும் கருத்துரிமை யையும் பன்மைத்துவத்தையும் காக்க உறுதியேற்போம் என்று தமிழக வாக்கா ளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் பிரகடனம் எழுத்தாளர்கள் கலை ஞர்களால் மதுரையில் வெளியிடப்பட்டது.

‘எழுத்தாளர்கள் - கலைஞர்கள் கூடுகை’ என்ற நிகழ்வு மதுரை முனிச்சாலை சந்திப்பில் தமிழ்த்திரைப் படத்தின் பிரபல பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் சிலையருகில் நடந்தது. 

கவிதை வாசிப்பு, இந்தியாவை வரைதல், தமிழ்நாடு வாக்காளர் களுக்கு வேண்டுகோள் விடுத்துக் கூட்டறிக்கை வெளியீடு என நடந்த இந்த நிகழ்வு புதுக்கோட்டை சுமதி குழுவினரின் பாடல்களோடு துவங்கியது. முன்னதாக, டி.எம்.சௌந்தரராஜன் சிலைக்கு தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, ச.தமிழ்ச்செல் வன், எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் மாலையணி வித்தனர். 

அதைத்தொடர்ந்து “இந்தியாவை வரைதல்” ஓவியக் கண்காட்சியை பேரா.அருணன் துவங்கி வைத்தார். 

தொடர்ந்து ஓவியர் ஸ்ரீரசா, ஓவியர் உமாபதி ஆகியோர் வரைந்தனர்.

கவிஞர்கள் யவனிகா ஸ்ரீராம், வல்லம் தாஜூபால், சைதை ஜெ, இரா. தனிக் கொடி, வெண்புறா, பா.மகாலட்சுமி ஆகியோர் கவிதை வாசித்தனர்.

பேரா. அருணன், ச.தமிழ்ச்செல்வன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், எழுத்தா ளர் இமயம், கவிஞர் சக்தி ஜோதி, கவிஞர் நந்தலாலா, அறம், சூர்யா சேவியர், மதுக் கூர் ராமலிங்கம் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். 

ஆதவன் தீட்சண்யா, தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் பிரகடனத்தை விளக்கி உரையாற்றினார். 

பின்னர் எழுத்தாளர்கள் கலைஞர்களால் பிரகடனம் வெளியிடப்பட்டது. 

எஸ்.வி. ராஜதுரை, அ.மார்க்ஸ், வே.மு.பொதிய வெற்பன், பாமா, க.பஞ் சாங்கம், பெருமாள் முரு கன், பசு கவுதமன், அரிமளம் சு.பத்மநாபன், சமயவேல், அ.ராமசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலைஞர் கள் தங்கள் ஒப்பத்தை அந்த அறிக்கையில் இட்டிருந் தார்கள். தமிழகம் முழுவ திலிருந்து, இடதுசாரி, ஜன நாயக, முற்போக்கு முகாம் களைச் சேர்ந்த எழுத்தா ளர்களும், கலைஞர்களும் திரளாகக் கூடியிருந்து, மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் கருத்துரிமையையும் பன்மைத்துவத்தையும் காக்க உறுதியேற்றதோடு, தோழர் சு.வெங்கடேசன் மற்றும் தி.மு.க. தலைமை யிலான அத்தனை கூட்டணி வேட்பாளர்களையும் பெரு வாரியான வாக்கு வித்தி யாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு அறை கூவலையும் விடுத்தனர்.

எனவேதான் நமது அரசியல் சாசனம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை அனைவருக்குமே உரிமையாக்கியுள்ளது. உச்ச நீதிமன்றமும்கூட கருத்துரிமையையும் விமர்சிக்கும் உரிமையையும் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது.  ஆனால் ஒரு கருத்தை வெளிப்படுத்திவிட்டு சுதந்திரமாக இருந்து விடவே முடியாது என்கிறது ஒன்றிய பாஜக ஆட்சி. மனிதநிலையிலிருந்து நம்மைத் தாழ்த்தும் இந்தக் கொடுங்கோல் ஆட்சியை இப்போது வீழ்த்தாவிட்டால் இனி தேர்தல் என்பதே பழங்கதையாகிப்போகும்.
u    தமது முற்போக்கான கருத்துகளுக்காக சமூகத்தின் நன்மதிப்பினைப் பெற்றிருந்த நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்ற சிந்தனையாளர்கள் அவர்களது கருத்துகளுக்காகவே சுட்டுக்கொல்லப்பட்டனர். கொலையாளிகள் பாரதிய ஜனதா கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள்.
u     ஒன்றிய பாஜக அரசு, தனது கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் மீது விமர்சனமும் மாற்றுக் கருத்தும் கொண்டுள்ள ஆளுமைகள் பலரையும் பீமாகோரேகான் பொய்வழக்கில் சிக்கவைத்து ஆண்டுக்கணக்கில் சிறைவைத்துள்ளது. பழங்குடி மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பெறத் துணைநின்ற ஸ்டேன்ஸ் சுவாமிக்கு கைதிக்குரிய உரிமைகளை மறுத்துச் சிறையிலேயே சாகடித்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது கடுமையான அடக்குமுறையை ஏவியது. உண்மையை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்கள், செயல்பாட்டாளர்கள்  மீது உபா போன்ற கொடிய சட்டங்களைப் பாய்ச்சுகிறது. எஞ்சியுள்ள மக்களும்கூட நாட்டைத் திறந்தவெளிச் சிறைச்சாலையாக உணருமளவுக்கு அரசின் கெடுபிடிகளும் அச்சுறுத்தல்களும் மூர்க்கமடைந்து வருகின்றன. அச்சமற்று வாழ்வதற்கும் படைப்புச் சுதந்திரத்திற்கும் தடையாக உள்ள எதையும் எதிர்க்கிற இயல்புணர்விலிருந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை  மேற்கொள்வதாக இந்தக் கூட்டறிக்கை அறிவிக்கிறது.  
u     வாக்குரிமையின் மூலம் மக்கள் வழங்கியத் தீர்ப்புகளைத் திருடுகிறது  பாஜக. தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற லஞ்சப்பணத்தை வாரி இறைத்து இதுவரை 182 சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஒன்பது மாநில அரசுகளைக் கவிழ்த்து தனது ஆட்சியை அமைத்திருக்கிறது. 
u     பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் அடித்து நொறுக்கித்     தட்டையாக்கி, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே கடவுள், ஒரே தேர்தல் எனும் ஒரே..ஒரே முழக்கங்களோடு ஒருநபர் வல்லாதிக்கத்தை நோக்கி நாட்டை  நகர்த்துகிறது பாஜக. 
u     உலகம் இதுவரை கண்டிராதபடி 7.5 இலட்சம் கோடி ரூபாயளவுக்கு நிதி முறைகேடுகளைச் செய்துள்ளது  பாஜக ஆட்சி. அது தேர்தல் பத்திரம் மூலம் செய்துள்ள டிஜிட்டல் வழிப்பறியைப் பார்த்து உலகமே திகைத்து நிற்கிறது.
u     தமிழர் பண்பாட்டின் தொன்மையை எடுத்தியம்பும் கீழடி அகழ்வாய்வைப் பாதியில் நிறுத்தியது, ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுத்தது, பிறப்பால் எவ்வுயிரும் சமம் என முழங்கிய திருவள்ளுவர், அய்யா வைகுண்டர், சன்மார்க்கர் வள்ளலார் ஆகிய பேராளுமைகளை சாதிய, சனாதனவாதிகளாகச் சிறுமைப்படுத்துவது,  தமிழுக்குப் பெருமை சேர்த்த ராபர்ட் கால்டுவெல்லை இழிவுபடுத்துவது, நீட் விலக்கிற்கு ஒப்புதல் வழங்க மறுப்பது, சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்க மறுப்பது, பேரிடர்க்கால நிவாரணத்தொகையை வழங்க மறுத்தது என தமிழ் - தமிழர் - தமிழ்நாடு விரோதப்போக்குடன் செயல்படும் பாஜகவை இந்தக்காலம் முழுவதும் அதிமுகவும் பாமகவும் ஆதரித்து வந்துள்ளன. 
u     இந்தப் பின்னணியில் மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் கருத்துரிமையையும் பன்மைத்துவத்தையும் தனித்துவத்தையும் காப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள இந்தியா கூட்டணியை ஆதரிப்பது எழுத்தாளர்கள் கலைஞர்களின் சமூகப்பொறுப்பு எனக் கருதுகிறோம். தமிழ்நாட்டு மக்களும் அவ்வாறே இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென அன்புடன் வேண்டுகிறோம்.