tamilnadu

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு அநீதியாகி விடும்

சென்னை, டிச.30- ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு  பதவி உயர்வு வழங்கியிருப்பதை மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்று தமிழக அரசை மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும், அன்றைய தென்மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவிற்கு  பணிமூப்பு அடிப்படையில் டிஜிபி-யாக பதவி  உயர்வு அளிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி யளிக்கிறது. இதனை மறுபரிசீலனை செய்வ தோடு, சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரை யும் விரைந்து தண்டிக்க வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை விசா ரித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்  அறிக்கை 2022 அக்டோபர் மாதம் வெளியானது. இந்த அறிக்கை  பல்வேறு குற்றங்களை வெளிக்  கொண்டுவந்தது. அன்றைய மாவட்ட ஆட்சித்  தலைவர் வெங்கடேஷ், தென் மண்டல ஐஜி  சைலேஷ் குமார் யாதவ், மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளராக இருந்த கபில் குமார்  சரத்கர், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

ஆனால், அருணா ஜெகதீசன் அறிக்கை வெளியாகி ஓராண்டான நிலையில், ஐ.ஏ.எஸ்  மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி  மாவட்ட முன்னாள் செயலாளர் கே.எஸ். அர்  ஜூணன் தொடர்ந்த வழக்கில் மதுரை சிபிஐ  சிறப்பு நீதிமன்றம் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனை வரையும் விசாரித்து, ஆறு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்நிலையில் அன்றைய தென் மண்டல  ஐஜி-யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ்  இப்போது டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள் ளது பணி மூப்பு அடிப்படையில் என்றாலும் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது துப்  பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இழைக்  கப்படும் அநீதி என்பதை சுட்டிக்காட்ட விரும்பு கிறோம்.

எனவே, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டிற்கு  காரணமானவர்கள் மீது உரிய சட்ட ரீதியான நட வடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், தற்  போது சைலேஷ் குமார் யாதவிற்கு வழங்கப் பட்டுள்ள டிஜிபி பதவி உயர்வினை மறுபரி சீலனை செய்து, ரத்து செய்திட வேண்டுமென வும் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம். 

இவ்வழக்கில் குற்றவாளிகள் அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளத் தயங்குவது உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ப தற்கு தூண்டுகோளாக அமைந்து விடும் என்  பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.