சென்னை, மார்ச் 3- எண்ணூரில் செயல்பட்டு வரும் கோர மண்டல் உர ஆலையை மூட வலியுறுத்தி எண்ணூர் ஆதரவுக் குழு சார்பில் சூழிலி யல் நீதிக்கான மனித சங்கிலி போராட்டம் ஞாயிறன்று (மார்ச் 3) சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது. எண்ணூர் பெரியகுப்பம் அருகே விரைவு சாலையில் கோரமண்டல் உரத் தொழிற் சாலை உள்ளது. இந்த ஆலைக்கு தேவை யான ரசாயனங்கள் வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி கப்பலில் இருந்து ஆலைக்கு திரவ அமோனியா எடுத்துச் செல்லப்படும் குழா யில் உடைப்பு ஏற்பட்டு அமோனியா கசிவு ஏற்பட்டது. இதனால் பெரிய குப்பம், சின்னக் குப்பம் உள்ளிட்ட பல கிராமங்களில் காற்றில் வாயு கலந்ததால் மக்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப் புகள் ஏற்பட்டது.
இதையடுத்து உயிருக்கு ஆபத்தாக உள்ள கோரமண்டல் உரத் தொழிற் சாலையை இழுத்து மூட வலியுறுத்தி பொது மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரு கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அவர்க ளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது.
இந்நிலையில் எண்ணூர் ஆதரவுக் குழு சார்பில் “மூச்சு விட விடு, கோரமண்டல் நச்சு ஆலையை இழுத்து மூடு” என்ற முழக்கத்தை முன் வைத்து மனித சங்கிலி போராட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் மாணவர்கள், பொது மக்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
மிக்ஜம் புயலின் போது கச்சா எண்ணெய் மழை நீருடன் கலந்து குடியிருப்புகளுக்குள், கடலின் ஒரு பகுதியில் கலந்ததால் குடியிரு ப்புவாசிகளுக்கு தோல் வியாதி ஏற்பட்டு அவதிப்பட்டனர். இந்நிலையில் மீனவர்க ளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானதோடு பறவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.