சென்னை, செப்.4- டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்வர்களுக்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளி யிட்டுள்ளது.
அதன்படி, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2 மற்றும் தொகுதி- 2 ஏ பணிகள் உள்ளடங்கிய பதவிகளுக்கான பொதுவான முதல்நிலைத் தேர்வு (கொள்குறி வகை) செப்டம்பர் 14 முற்பகல் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்ப தாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தேர் வாணையத்தின் இணையதளம் www.tnpscgov.in மற்றும் www.tnpscexamsin-இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம் செய்யும் தளத்தின் மூலம் மட்டுமே தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அனுமதி சீட்டுடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். தவறினால், தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க முடியாது. தேர்வு எழுதுவோர் தங்களு டைய ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளி நகலை கொண்டுவர வேண்டும்.
அனுமதிச் சீட்டை, தேர்வு எழுதுவோர் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உடனடியாக தேர்வாணை யத்திற்கு மின்னஞ்சல் (gridvancetnpsc@tn.gov.in) மூலம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.