சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விசிக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சியினருக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் நலனுக்கும், அரசுக்கும் எதிராக ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் உள்ளதாகக் கூறி தேநீர் விருந்தை சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விசிக, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.