tamilnadu

img

தமிழ்நாட்டில் இதுவரை 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 11,743 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று சென்னையில் தமிழ்நாடு அரசு பன்னாக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மாநில மாவட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், குரங்கு அம்மை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் கையேட்டினை வெளியிட்டார். இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 11,743 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று ஒரு நாளில் 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.