தமிழ்நாடு பட்ஜெட் கூட்டுத்தொடர் வரும் 22-ஆம் தேதி வரைக்கும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டுத்தொடர் வரும் 22-ஆம் தேதி வரைக்கும் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 13,14 ஆகிய 2 நாட்கள் ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெறும் எனவும், பிப்ரவரி 15-ஆம் தேதி தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிப்ரவரி 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை எனவும், பிப்ரவரி 19-ஆம் தேதி நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். பிப்ரவரி 20-ஆம் தேதி 2024-2025ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் 21-ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறும்; 22-ஆம் தேதி பதிலுரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.