tamilnadu

img

ஜவ்வாது மலையில் கோடை விழா இன்று துவங்குகிறது

திருவண்ணாமலை, ஜுன் 14- திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம் ஜமுனாமரத்தூரில் 22ஆவது ஜவ்வாதுமலை கோடை விழா 2019 இன்று (சனிக்கிழமை) துவங்கி இரண்டு நாட்கள் (ஜூன் 15, 16) நடைபெறுகிறது.இதில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். கோடை விழாவை சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொழில்துறை அமைச்சர் எம். சி. சம்பத், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்து, அரசுத் துறைகளின் கண்காட்சி அரங்குகளை திறந்து வைக்கின்றனர். மேலும்  அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை யாற்றுகின்றனர். விழாவில் சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அரசு தலைமைச் செயலர், ஆணையர் சுற்றுலாத் துறை மற்றும் வேளாண்மை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அதிகாரி அபூர்வ வர்மா, மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி, மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்ற னர். மலையில் மலைவாழ் மக்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் என அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளது. மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள், பாடல்கள், விளையாட்டு கள், உணவு வகைகள், மலையில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், பயிர்கள் உள்பட பல்வேறு பொருட்கள் அடங்கிய சந்தை ஆகியவை இடம் பெறுகிறது. ஜமுனாமரத்தூர் கோமுட்டி ஏரியில் இந்த ஆண்டு முதல் முறையாக பறக்கும் ராட்சத பலூன் மற்றும் ஏரியை சுற்றி வருவதற்கு குதிரை சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை விழா நடைபெறும் மேடையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை மாலை லேசர் காட்சி மற்றும்மேஜிக் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) நாய்கண்காட்சி, பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் கொழு, கொழு குழந்தைகள் போட்டி, பெண்க ளுக்கான கோலப் போட்டி, மற்றும் பல்வேறுவிளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. மேலும் இரண்டு நாட்களும், காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளன.திருவண்ணாமலை, ஜுன் 14- திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம் ஜமுனாமரத்தூரில் 22ஆவது ஜவ்வாதுமலை கோடை விழா 2019 இன்று (சனிக்கிழமை) துவங்கி இரண்டு நாட்கள் (ஜூன் 15, 16) நடைபெறுகிறது.இதில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். கோடை விழாவை சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொழில்துறை அமைச்சர் எம். சி. சம்பத், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்து, அரசுத் துறைகளின் கண்காட்சி அரங்குகளை திறந்து வைக்கின்றனர். மேலும்  அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை யாற்றுகின்றனர். விழாவில் சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அரசு தலைமைச் செயலர், ஆணையர் சுற்றுலாத் துறை மற்றும் வேளாண்மை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அதிகாரி அபூர்வ வர்மா, மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி, மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்ற னர். மலையில் மலைவாழ் மக்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் என அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளது. மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள், பாடல்கள், விளையாட்டு கள், உணவு வகைகள், மலையில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், பயிர்கள் உள்பட பல்வேறு பொருட்கள் அடங்கிய சந்தை ஆகியவை இடம் பெறுகிறது. ஜமுனாமரத்தூர் கோமுட்டி ஏரியில் இந்த ஆண்டு முதல் முறையாக பறக்கும் ராட்சத பலூன் மற்றும் ஏரியை சுற்றி வருவதற்கு குதிரை சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை விழா நடைபெறும் மேடையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை மாலை லேசர் காட்சி மற்றும்மேஜிக் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) நாய்கண்காட்சி, பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் கொழு, கொழு குழந்தைகள் போட்டி, பெண்க ளுக்கான கோலப் போட்டி, மற்றும் பல்வேறுவிளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. மேலும் இரண்டு நாட்களும், காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளன.