tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

கனரக வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு  

கடலூர், ஜூன் 28- சென்னையில் பள்ளி மாணவி சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், கடலூர் நகரில் பள்ளி நேரங்களில் குடிநீர் வாகனம் மற்றும் கன ரக வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறை சார்பில் தண்ணீர் சப்ளை செய்யும் வாகனங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. குறிப்பாக, கனரக வாக னங்கள் செல்வதற்கு நேரக் கட்டுப்பாடுகள் பாதிக்கப் பட்டுள்ளதுடன், விழிப்புணர்வு பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் அளிக்கப்படுகிறது. மக்கள் அதிகம் சாலைகளை பயன்படுத்தும் நேரங்களில் கனரக வாக னங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலூரில் தண்ணீர் சப்ளை செய்யும் வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடுகள் விதித்து காவல்துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டது. காலை 7:30 மணி முதல் 10 மணி வரை நகர எல்லைக்குள் வாகனங்கள் இயக்கப்பட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை போக்குவரத்து காவல் ஆய்வாளர் அமர்நாத் வழங்கி னார். இந்த நிகழ்வில் 75க்கும் மேற்பட்ட தண்ணீர் சப்ளை செய்யும் வாகனங்கள் உரிமை யாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

கதவை உடைத்து திருட்டு  

கடலூர், ஜூன் 28- கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே வடகராம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுப்பையா என்பவரின் வீட்டில் மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து நுழைந்து திருட்டு சம்பவத்தை நிகழ்த்தி யுள்ளனர்.  திருமண நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய சுப்பையா, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 4 சவரன் செயின், ஒன்றரை சவரன் காயின், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டுள்ளன. மொத்தம் ஐந்து பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உடனே ராமநத்தம் போலீ சாருக்கு தகவல் அளிக்கப் பட்டது. ராமநத்தம் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.