tamilnadu

img

உடற்பயிற்சி, தியானம் மூலமாக ஞாபக மறதியை குறைக்கலாம் மருத்துவர்கள் தகவல்

சென்னை,அக். 10- உடற்பயிற்சி, தியானம்  உள்ளிட்டவை மூலமாக ஞாபக மறதியை குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஞாபக சிகிச்சை மையம் தொடங்க ப்பட்டுள்ளது. இதனை பிரபல தொலைக்காட்சி தொகுப்பா ளர் கோபிநாத் தொடங்கிவை த்தார். தொடக்கவிழாவில் பேசிய மூத்த நரம்பியல் வல்லுனர் டாக்டர் பிருத்திகா சாரி இந்த மையத்தில் ஒரு வரின் ஞாபக சக்தியானது ஒரு முழுமையான பரி சோதனைக்கு உட்படுத்த ப்பட்டு, ஒரு வேளை டிமென்ஷியா இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கான உரிய சிகிச்சை கள் உடனடியாக வழங்கப்படும் இதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஞாபகம் குறித்த பிரச்சனை கள் படிப்படியாக குறைக்கப்படும் என்றார். மனச்சோர்வினால் ஏற்படும் டிமென்ஷியா குறித்து பரிசோதித்தல், கண்டறிதல் மற்றும் ஞாபகம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கும், அவர்க ளின் பொறுப்பாளர்க ளுக்கும் தொடர் ஆலோ சனை மற்றும் தேவையான தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை இந்த மையம் மேற்கொள்ளும். இந்த ஞாபக சக்தி கிளினிக் நாள்தோறும் மாலை 3 மணிமுதல் 5 மணி வரை செயல்படும். ஒவ்வொறு மாதமும் 2வது புதன்கிழமை பிற்பகல் 2மணி முதல் மாலை 5 மணிவரை மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவருக்கு உதவியாளர்க ளாக இருப்பவர்கள் சந்திக்கும் நிகழ்வும் ஆதரவு கூட்டமும் நடைபெறும் என்றும் அவர் கூறினார். காவேரி மருத்துவ மனையை சார்ந்த நரம்பியல் வல்லுனர்கள் மற்றும் மனநல மருத்துவர்கள் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று, பலவிதமான டிமென்ஷியா, மன அழுத்தம், ஞாபக பிரச்சனை கள், மற்றும் மன ரீதியான இடையூறுகள் குறித்து பேசினர்.