சென்னை, நவ.6- சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில ளிக்காமல், ஆர்எஸ்எஸ் அமைப்பு பின்வாங்கி ஓட்டம் எடுத்துள்ளதாக விடு தலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்தார். கோயம்பேடு பேருந்து நிலையத் தில், தனது முன்னுரையுடன் கூடிய மனுஸ்மிருதி நூல் பிரதிகளை விடு தலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பொதுமக்க ளுக்கு இலவசமாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் பேரணி நடைபெறும் இடங்களில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தங்களது உறுப்பினர் அட்டைகளை வழங்க வேண்டும். அந்த அமைப்பு பதிவு செய்யப்படாத அமைப்பாக இயங்கிக் கொண்டிருக்கி றது.
அதற்கென்று தனியே ஒரு அலுவலகம், அடையாளம் இல்லை. கிட்டத்தட்ட ஒரு தலைமறைவு இயக்கத் தைப் போல, ஒரு பயங்கரவாத பாசிச அமைப்பு ஆர்எஸ்எஸ் அமைப்பு இயங்குகிறது என்பதை நாட்டு மக்க ளுக்கு உயர் நீதிமன்றமே அம்பலப் படுத்திவிட்டது”என்றார். 50 இடங்களில் பேரணி நடத்த விண்ணப்பித்தார்கள். அவர்களால் ஆதாரங்களை காண்பிக்க முடிய வில்லை. உறுப்பினர் அட்டைகளை காண்பிக்க இயலவில்லை. அவர்க ளது முகவரி என்ன? மாவட்ட, ஒன்றிய, முகாம் அல்லது கிளை அளவிலான பொறுப்பாளர்கள் பட்டியலை உயர் நீதிமன்றம் கேட்டது. ஆனால், அவர் களால் தரமுடியவில்லை. இதுதான் உண்மை என்றும் நாங்கள் இந்து சமுதாயத்திற்கு பாதுகாப்பு அளிக் கக்கூடிய வகையில், இந்துக்களின் நலன்களை முன்னிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த புத்த கத்தை விலையில்லாமல் வழங்குகி றோம் என்றும் அவர் கூறினார்.