tamilnadu

img

“ஒரு மனிதன்... ஒரு like... ஒரு உலகம்...”

90 சதமான பேர் நமது கையில்  மொபைல் போன், டேப்லட் (Tab) எப்போதும்  கூடவே வச்சிருக்கோம். குறிப்பாக தூங்கும்போது கூட பக்கத்திலேயே இருக்கும்படியாக வாழ்ந்து வருகிறோம். மொபைல் போன் கால், மெஸேஜ், வாட்ஸ்அப் வராட்டியும் கூட நிமிசத்துக்கு நிமிசத்துக்கு மொபைல் போனை  பார்க்கும் பழக்கம் அனிச்சை செயலாக மாறி விட்டது. 

இது போன்ற சூழலில் இருப்பவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதை குறைச்சுக்க வேண்டும் என்று மனநல டாக்டர் சிவபாலன் இளங்கோவன் தெரிவிக்கிறார்.

இப்படி அடிக்ட் ஆகக் காரணம், நம்ம மூளைக்குள்ள இருக்கிற “அமிக்டலா”(Amygdala) எனும் மகிழ்ச்சி மையம் தூண்டப்படுவதுதான் காரணம். எதுவும் அளவோடு இருந்தால் ஒன்றும் இல்லை. 

நிமிசத்துக்கு நிமிசம் தொடர்ந்து இப்படி செய்யும்போது போதைக்கு அடிமையான சூழலில் இருப்பவர்கள் போன்று ஆகி விடுகிறோம் என்று குறிப்பிடுகிறார் மருத்துவர். 1980 களில மது போதையில அடிமையானவங்க மூளையோட செப்டம் பகுதியை உள்ளடக்கிய நியூக்ளியஸ் அக்கும்பென்ஸ் பகுதி பாதிப்படைந்திருப்பதை கண்டுபிடிச்சிருக்காங்க. போதையால் பாதிக்கப்படும்  குடி நோயாளியாலும், சிகரெட் பிடிப்பவர்களாலும், பாக்கு போடுபவர்களாலும், புகையிலை போடுபவர்களாலும் அதிலிருந்து  மீள  முடியவில்லை.

இதுவரை அந்தப் போதைப் பழக்கம் உள்ளவங்களுக்கு மட்டுமே இந்த பிரச்சனை…. 

அது போல தான் இப்போது நம் அனைவருக்கும் உள்ள பிரச்சனை கணினி, மொபைல் போன் போன்ற டிஜிட்டல் பொருள்களை அளவுக்கதிகமாக பயன்படுத்துபவர்களை   டிஜிட்டல் போதைக்காரர்கள் என்று தெரிவிக்கிறார் மருத்துவர். டிஜிட்டல் போதை பற்றி அக்கு வேறா ஆணி வேறாக பிரிச்சுப் போட்டிருக்காரு நம்ம டாக்டரு சிவபாலன் இளங்கோவன். நீங்களும்  மொபைல் போன் வேற...போதை வேறன்னு நினைச்சு, போன்லாம் நம்மள என்ன பன்னப் போகுதுன்னு அலட்சியமா இருந்திராதீங்க. சுயமா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அவசியம் படிக்க வேண்டிய நூல் இது

நூலாசிரியர் : மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்
வெளியீடு : உயிர்மைப் பதிப்பகம், சென்னை
விலை : ரூ.70
தொடர்பு எண் : 
044 48586727