திருவண்ணாமலை, ஜூலை 3- நகராட்சி நிர்வாகம் தர மற்ற முறையில் சாலை அமைப்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். திருவண்ணாமலை ஈசானிய லிங்கம் அருகே தற்காலிக பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து அவலூர் பேட்டை சாலை ரயில்வே கேட் வரையில் சாலை சீர மைக்கும் பணி நடைபெறு கிறது. சாலையையொட்டி 10 அடி அகலத்தில் உள்ள மண் தரை பரப்பையும், ஏற்கனவே உள்ள சிமெண்ட் சாலையையும் கிளறி, கெட்டிப்படுத்திய பிறகு புதிய சாலை அமைக்க வேண்டும். ஆனால் மண் தரையின் மீதே புதிய சாலை அமைப்பதால் விரைவில் சாலை சேதமடைய வாய்ப்புள்ளது. தகவல் அறிந்த் அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீர பத்திரன், எஸ்.ராமதாஸ், நகரச் செயலாளர் எம்.ரவி, வழக்கறிஞர் எஸ்.அபிராமன் ஆகியோர் சாலை திட்டம் குறித்து பார்வையிட்டனர். பின்னர் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறு கையில், தரமில்லாமல் அமைக்கப்படும் சாலை குறித்து, பணியில் ஈடுபட்டி ருந்தவர்களிடம் கேள்வி எழுப்பினோம். அதற்கு இந்த நகரத்தில், பலகோடி ரூபாய் மதிப்பில் இதேபோல் வேலை நடைபெறுகிறது. அதையெல்லாம் விட்டு விட்டு, இங்கு வந்து ஏன் கேள்வி கேட்கிறீர்கள். ஏதாவது கேள்வியிருந்தால், அதை நகராட்சி ஆணையரி டம் கேளுங்கள் என்று கூறி விட்டு சென்றுவிட்டனர். இது தொடர்பாக ஆணையரிடம் விவரம் பெற்று, அடுத்த கட்ட நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.