tamilnadu

img

மணலியில் திண்ணை நூலகம் திறப்பு

மணலியில் திண்ணை நூலகம் திறப்பு'

சென்னை, மே 8- மணலி புதுநகரில் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்குமான திண்ணை நூலகம் திறக்கப்பட்டது. பள்ளிக்கல்வி பாது காப்பு இயக்கத்தின் வழி காட்டுதலின் அடிப்படை யில், மணலி புது நகர் பகுதியில் அமைக்கப் பட்டுள்ள திண்ணை நூல கத்தை மணலி புதுநகர் நூலக வாசகர் வட்டத்தை சேர்ந்த அமுதா திறந்து வைத்தார். வாசகர் வட்டத்தின் தலைவர் நாக ராஜன், மணலி புது நகர் குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் சந்திரமோகன், தீனதயாளன், சாம், இசை மொழி தென்கனல் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களி  டம் நூலகத்தின் பயன்  பாட்டையும், வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினர். குழந்தைகள் எளிமை யாக படிக்கும் வகையில் அமைந்த கதைகள் மற்றும் அறிவியல் சார்ந்த புத்தகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள் ஆர்வத்துடன் எடுத்து படித்து மகிழ்ந்தனர். படித்ததை பகிர்ந்து கொண்டனர். மாலை நேரத்தில் மாணவர்கள் குழுக்களாக அமர்ந்து உரக்க வாசிக்கலாம், குழு வாக வாசிக்கலாம். வீட்டுக்கு புத்தகத்தை எடுத்துச் செல்லலாம். மேலும் நிறைய புத்தகம் படிப்பவர்கள், படித்த கதைகளை, செய்தி களை யார் நிறைய பகிர்ந்து கொள்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வாரம் தோறும் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோடைவிடுமுறை யில் விளையாட்டோடு வாசிக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு, புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் பா.கா.தென்கனல் இசைமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.