சென்னை, ஜூன் 12- அதிமுகவில் இனி ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு வருவதற்கு வாய்ப்பில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக நிர்வாகிகள் கூட்டம் புதனன்று (ஜூன் 12) அக்கட்சியின் தலைமைய கத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மாவட்டச் செய லாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து விதமான நட வடிக்கையும் மேற்கொள்வ தென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலுக்கு பின் நடைபெறுகிற வழக்கமான கூட்டம் தான் இது. அதிமுக எம்எல்ஏக்கள், எம்,பிக்கள்., மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டமாக நடைபெற்றது. இதில், கட்சிக்கான வளர்ச்சிப் பணி கள் குறித்துப் பேசப்பட்டது. ஒற்றைத் தலைமை குறித்து சிலர் கூறியதால், கூட்டப்பட்ட கூட்டம் என்று எதுவும் இல்லை. இதனால், கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த பாதகமும் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் விவாதித்தோம் இன்று அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கி றோம். எந்தப் பிரச்சனையும் இல்லை.இனி ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். இதேபோல், கூட்டம் முடிந்த பின் செய்தி யாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “அதிமுக பொதுக்குழு குறித்து முதல மைச்சர், துணை முதல மைச்சர் முடிவெடுப்பார்கள். தேர்தல் முடிவு மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம்’ என்றார்.