சென்னை, மே 8- குஜராத் மாநில பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு நிறுவன மான அமுல் நிறுவனமும் நீண்ட காலமாக, பால் பொருட்களை விற் பனை செய்து வருகிறது. அமுல் நிறுவனத்தின் பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவ் வாறு அமுல் பால் பொருட்களை விற்பனை செய்தாலும், ஆவி னுக்கு போட்டியாக பாலினை விற் பனை செய்வது இல்லை.
இந்நிலையில் தான், கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத் தில் பால் பாக்கெட் தொழிற்சாலை யை அமுல் நிறுவனம் அமைத்து வருகிறது. இங்கிருந்து பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பொருட்களை, தமிழகம் முழுவதும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை களைத் துவக்கியது. இதற்கு தமி ழக அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், பால் கொள்முதலை அமுல் நிறு வனம் துவங்கவில்லை.
ஆனாலும், கிருஷ்ணகிரியில் பால் பண்ணை கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் தீவிர மாக நடந்து வருகின்றன. முதற் கட்டமாக, ஆவினுக்கு போட்டி யாக தயிர், பனீர், யோகர்ட், லஸ்ஸி விற்பனையை அமுல் நிறுவனம், ‘டீலர்’கள் வாயிலாக துவங்கியுள் ளது என்று தகவல் வெளியானது.
இதற்கான கிடங்கு, செங்குன் றம் அருகே அமைக்கப்பட்டு உள் ளது. இரண்டு மாதங்களில் சித்தூர் பால் பண்ணையில் இருந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு மாவட்டங்க ளில், பால் விற்பனையை துவங்கு வதற்கு அமுல் முடிவெடுத்துள் ளது என்றும் தகவல் வெளியா னது.
இந்நிலையில் ஆவின் நிறுவ னத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால் வளத்துறை மறுப்பு தெரிவித்துள் ளது. தமிழகத்தில் அமுல் நிறு வனம் தற்போது வரை பால் பண் ணையை அமைக்கவில்லை என் றும் அமுல் நிறுவனம் பால் விற்ப னையை தற்போது வரை தமி ழகத்தில் தொடங்கவில்லை என் றும் பால்வளத்துறை கூறியுள்ளது.