ஈரோடு, ஆக.3- சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்ன மலையின் நினைவு தினம் சனியன்று அனுசரிக்கப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்ன மலையில் 219 ஆவது நினைவு தினம் சனியன்று அரசு சார்பில் அனுசரிக்கப் ்பட்டது. அதன்படி, ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார் பில், ஓடாநிலையில் அமைந்துள்ள அவ ரது உருவச்சிலைக்கு வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ராஜகோ பால் சுன்கரா, சட்டமன்ற உறுப்பினர் கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.ஜி. வெங்கடாஜலம், ஈ.ஆர்.ஈஸ்வரன், மாந கராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் நவமணி மற்றும் தீரன் சின்னமலையின் சந்ததியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் இதேபோன்று, சேலம் மாவட்டம், சங்ககிரியிலுள்ள அவரது நினைவுத் தூண் அமைவிடத்தில் வைக்கப்பட்டி ருந்த உருவப்படத்திற்கு நகராட்சி நிர் வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், சேலம் ஆட்சியர் ரா. பிருந்தாதேவி, நாடாளுமன்ற உறுப்பி னர்கள் டி.எம்.செல்வகணபதி, வி.எஸ். மாதேஸ்வரன், மாநகராட்சி ஆணையர் ரஞ்ஜீத் சிங், காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.