“தீக்கதிர் விற்பனை இயக்கம் தீக்கதிர் அனுபவங்களை அசை போட வைக்கிறது.... இரகசியமாக படித்ததிலிருந்து, பலரைப் படிக்க வைப்பது, வீடு வீடாகப் பத்திரிகை போடுவது, பிறகு சில கட்டுரைகளை எழுதுவது என பத்திரிகை சார்ந்த பணிகளின் அனுபவங்கள்! வாசிப்பு அனுபவமும் மாறி விட்டது. அச்சில் விட்டுப்போன எழுத்துக்கள், காலியாக உள்ள இடங்களை நாமாக வாசிக்கும் நிலையில் துவங்கி, இன்று பல வண்ண இதழாக நல்ல வாசிப்பு அனுபவம். தீக்கதிர் வெளிக்கொண்டுவர பணியாற்றும் தோழர்களின் சிரமங்களையும் அர்ப்பணிப்பையும் நன்கு அறிவேன். இன்னமும் குறைகள் பல உள்ளதையும் அறிவேன். என்ன இருந்தாலும் தமிழ் நாளிதழ்களில் தீக்கதிர் செய்யும் பணிகளுக்கு இணையாக எதுவும் இல்லை.... தீக்கதிர் நமது நாளேடு. அதை வலுப்படுத்துவது இந்த காலத்தின் தேவை. காலையில் அதை படிக்காமல் மற்ற வேலைகளைப் பார்க்க இயலாத நிலையில் தான் இன்றும் நான்!!” என்று சிபிஎம் மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் உணர்வுப்பூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார்.